Followers

Thursday 4 October 2012

தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மீண்டும் ஒருமனதாக தேர்வு



தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மீண்டும் ஒருமனதாக தேர்வு தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மீண்டும் ஒருமனதாக தேர்வு

சென்னை,அக்.5-
 தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது 2012-2016-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  டி.வி.சீதாராமராவ் சீனியர் துணை தலைவராகவும், கே.எம்.ராமலிங்கம், ராஜா ஆர்.ராஜகோபால் த�¯ �ண்டைமான், சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, அந்தோணி கே.ஜார்ஜ் ஆகியோர் துணை தலைவராகவும், ஆர்.ரவிகிருஷ்ணன் செயலாளராகவும், எம்.பத்மநாபன் இணை செயலாளராகவும், என்.நாராயணகுப்தா பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  செயற்குழு உறுப்பினர்களாக எல்.ஜெயச்சந்திரன், டி.கே.வரலட்சுமி, எம்.சுரேஷ்குமார், என்.பக்தவச்சலம், எஸ்.வேல்சங்கர், பி.அண்ணாமலை ஆகியோரும் போட்டியின்றி தேர்வு ச ெய்யப்பட்டனர்.  

Friday 14 September 2012

கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி


கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இடிந்தகரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் நேற்று கடலில் à ��ின்று போராட்டம் நடத்தியபோது, கடற்படை விமானம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவது போல தாழ்வாகப் பறந்ததால் பீதியடைந்த 5 போராட்டக்காரர்கள் நிலை தடுமாறி கடலில் விழுந்தனர். அதில் ஒருவர் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க 15 நாட்களாக கழுத்தளவு நீரில் நின்று விவசாயிகள் நடத்திய போராட்ட முறை இப்பொழுது கூடங்குளத்தில் எதிரொலித்து வருகிறது.

நேற்று முதல் இடிந்தகரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிராம மக்கள் கடலில் à ��ின்றபடி போராடி வருகின்றனர். இன்று 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடலோரக் காவல் படையின் சிறிய ரக விமானம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது படு தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் தொனியில் இருந்தது. மத்தியப் பà ��ரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது கூட இப்படி நடந்து கொள்ளவில்லை மத்திய பாதுகாப்புப் படை. ஆனால் நேற்று நடந்ததைப் பார்த்த பொதுமக்கள், இது சிங்களப் படையினர், ஈழத் தமிழர்கள் மீது ஏவிய அடக்கà ��முறையை நினைவூட்டுவதாக உள்ளதாக குமுறல் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அச்சுறுத்தலால் ஒரு அப்பாவி போராட்டக்காரர் உயிரிழந்துள்ள செய்தி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் பலரும் இப்போராத்தில் கலந்து கொண்ட போது சிலர் தூண்டில் பாலத்தில் நின்றபடி போராட்டத்தை பார்த்தனர். அப்போது பல முறை கடலோரக் காவல்படை விமானம் மிகத் தாழ்வாக பறந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகைகளை பயமுறுத்தியது. விமானம் மிகமிக தாழ்வாக பறக்கும் போ�® �ு பாலத்தில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் விமானம் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் தான் பாலத்தில் இருந்து சகாயராஜ் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்துள்ளனர். அதில் சகாயராஜ் தலையில் படுகாயமடைந்தது. இதையடுத்து 5 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராஜ் உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட தமிழர்கள் மிகவும் கொதித்து போயுள்ளனர். காரணம், இதுவரை 550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் கொல்லபட்ட போது பாதுகாப்புக்கு வராத இந் திய கடலோர காவல் படை , இப்போது தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராட்டும் மக்களை குறிவைத்து வானில் பல நூறுமுறை பறந்து செல்கிறது. எவ்வளவு முறையிட்டும் இந்திய அரசு மக்களை காக்க இது போல விமானம் மூலம் கண்காணிக்கவில்லை . இன்று மட்டும் ஏன் இந்த விமானம் பலமுறை சுற்றிச் சுற்றி வட்டமிட்டது என�¯ �ற கேள்வியை எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.


/

Thursday 13 September 2012

மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!

மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்! மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!

மதுரையில் நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆ தரவாளர்களிடையே பெரும் அடிதடி நடந்து போராட்ட இடமே போர்க்களமாகிப் போனது.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் போலவே திமுகவிலும் இப்போது கோஷ்டிப் பூசல் கலாச்சாரம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் லேசு பாசாக இருந்த இந்த கோஷ்டிப் பூசல் இப்போது தள்ளுமுள்ளு, கை கலப்பு, அடிதடி, வார்த்தைகளை விடுதல், வாரி விடுதல் என அவதாரங்களை எடுக்க ஆரம்�® �ித்துள்ளது.

மதுரையைப் பொறுத்தவரை அண்ணன் அழகிரி கோஷ்டி மட்டும்தான் ஒரே அதிகார மையமாக இருந்து வந்தது. ஆனால் சட்டசபைத் தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் தம்பி ஸ்டாலினின் கையும் அங்கு ஓங்கத் தொடங்கி விட்டது. அழகிரி ஆதரவாளர்கள் பலரே கூட இப்போது ஸ்டாலின் பக்கம்தான் நிற்கின்றà ��ர். குறிப்பாக மதுரை நகர் மாவட்டச் செயலாளர் தளபதி இப்போது தீவிர ஸ்டாலின் ஆதரவாளராகியுள்ளார்.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் தளபதி, அழகிரி ஆதரவà ��ளர்களான முன்னாள் எம்.எல்.ஏ கவுஸ் பாட்ஷா, முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கமும் வந்திருந்தார்.

அனைவரும் மேடையில் இருந்தனர். அப்போது அழகிரி ஆதரவாளரும், சமீபத்தில் மாவட்ட அவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவருமான இசக்கிமுத்துவை மேடைக்கு வருமாறு அழைத்தனர் சிலர�¯ . இதைப் பார்த்து ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது, தடித்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் கைகள் கலக்க அந்த இடமே போர்க்களமானது. சரமாரியாக இரு தரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.< /div>
இதைப் பார்த்து போராட்டத்திற்கு வந்த தொண்டர்கள், ஸ்தம்பித்துப் போய் நின்றனர். பின்னர் போலீஸார் விரைந்து வந்து மோதலை விலக்கி விட்டனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஒப்புக்கு சில கோஷங்களைப் போட்டு மாநகராட்சியைக் கண்டித்து விட்டு மூன்றே நிமிடத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டு தளபதி உள்ளிட்டோர் அங்கிருந்து போய் விட்டனர்.

பட்டப் பகலில் பப்ளிக்கில் நடந்த இந்த கோஷ்டி மோதலால் மதுரை வட்டார திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர்.


/

இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா

இலங்கையின் தமிழினப் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கும் அதே நேரத்தில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் சிங்களருக்கு இடையூறு ஏற்படக் க ூடாது என்பதில் உறுதியாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது.

துணிச்சல் மிகக் தீர்மானங்கள்:

இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெ றும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன்.

தமிழக அரசின் எதிர்ப்பு:

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதால், அதற்கு நம் தமிழகத்தின் எதிர்ப்பை, உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை தடை செய்தேன். இவை காரணமாக, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக வாழ் தமிழர்களும் எனது அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர். எனினும் இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மீகப் பயணம் போன்றவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வரு கை புரியும் சிங்களர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் எனது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

மெளனியாக மத்திய அரசு- கருணாநிதி மீது தாக்கு:

ஆனால், தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார்.

இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கை அரசிற்கும், ராணுவத்திற�¯ �கும் ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய இடங்களில் மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், அதற்கு ஒரு வலுவான எதிர்ப்பினை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

இருப்பினும், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர், இலங்கைத் தமிழர்களுக்காக à ��ன கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார். இவ்வாறு தமிழர் மானத்தை காப்பாற்றுபவர்தான் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் எனது அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறார்.

சர்.பிட்டி தியாகரயரின் தன்மானக் கதை:

தன்மானம் பெரிது என்று வாடிநயன் தான் தமிழன். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை இந்தத் தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சர். பிட்டி தியாகராயர் என்ற ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர். பதவிக்காக எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இல்லாதவர். இவர் சென்னை மாந கராட்சியின் மேயராக சில காலம் இருந்தார். அந்த சமயத்தில், வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்திருந்தார். இளவரசரை வரவேற்பதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போதைய கவர்னரான லார்டு வெல்லிங்டன் சர் தியாகராயரைப் பார்த்து, சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் இளவரசரை முதலில் நீங்கள் தான் வரவேற்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு சர். தியாகராயரும் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் கவர்னரிடமிருந்து வேறு ஒரு தகவல் வந்தது.

இளவரசரை சந்திக்கும் போது நீங்கள் கோட், சூட் உடையில் தான் இளவரசரை வரவேற்க வேண்டும் என்பது தான் அந்தத் தகவல்.

உடனே, சர்.பிட்டி தியாகராயர் அரசாங்கத்திற்கு ஒரு பதில் எழுதினார் . அதில் என்னுடைய வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை இந்த ஆடைகளோடு என்னை இளவரசர் பார்க்க விரும்பினால் நான் அவரை உளமார வரவேற்கிறேன். இந்த ஆடையுடன் நான் அவரை பார்க்க முடியாது என்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து அமைதி பெறுவேன். இளவரசரை வரவேற்பதற்காக நான் என்னுடைய வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை என்று உறுதிபட தெரிவித்து இருந்தார்.

அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

அந்த ஆங்கிலேய அரசு பணிந்து வந்து, அவருடைய வழக்கமான உடையிலேயே இளவரசரை வரவேற்க அனுமதி அளித்தது. சர். தியாகராயர் நடந்து கொண்ட விதம் தான் தமிழனின் தன்மானம். அதனால் தான் பிரிட்ட ிஷ் அரசாங்கம் அவருடைய கோரிக்கையை ஏற்றது.

இத்தகைய தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனை சீர்குலைக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக ்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார் ஜெயலலிதா.


/