Followers

Friday 14 September 2012

கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி


கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இடிந்தகரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் நேற்று கடலில் à ��ின்று போராட்டம் நடத்தியபோது, கடற்படை விமானம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவது போல தாழ்வாகப் பறந்ததால் பீதியடைந்த 5 போராட்டக்காரர்கள் நிலை தடுமாறி கடலில் விழுந்தனர். அதில் ஒருவர் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க 15 நாட்களாக கழுத்தளவு நீரில் நின்று விவசாயிகள் நடத்திய போராட்ட முறை இப்பொழுது கூடங்குளத்தில் எதிரொலித்து வருகிறது.

நேற்று முதல் இடிந்தகரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிராம மக்கள் கடலில் à ��ின்றபடி போராடி வருகின்றனர். இன்று 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடலோரக் காவல் படையின் சிறிய ரக விமானம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது படு தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் தொனியில் இருந்தது. மத்தியப் பà ��ரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது கூட இப்படி நடந்து கொள்ளவில்லை மத்திய பாதுகாப்புப் படை. ஆனால் நேற்று நடந்ததைப் பார்த்த பொதுமக்கள், இது சிங்களப் படையினர், ஈழத் தமிழர்கள் மீது ஏவிய அடக்கà ��முறையை நினைவூட்டுவதாக உள்ளதாக குமுறல் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அச்சுறுத்தலால் ஒரு அப்பாவி போராட்டக்காரர் உயிரிழந்துள்ள செய்தி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் பலரும் இப்போராத்தில் கலந்து கொண்ட போது சிலர் தூண்டில் பாலத்தில் நின்றபடி போராட்டத்தை பார்த்தனர். அப்போது பல முறை கடலோரக் காவல்படை விமானம் மிகத் தாழ்வாக பறந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகைகளை பயமுறுத்தியது. விமானம் மிகமிக தாழ்வாக பறக்கும் போ�® �ு பாலத்தில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் விமானம் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் தான் பாலத்தில் இருந்து சகாயராஜ் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்துள்ளனர். அதில் சகாயராஜ் தலையில் படுகாயமடைந்தது. இதையடுத்து 5 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராஜ் உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட தமிழர்கள் மிகவும் கொதித்து போயுள்ளனர். காரணம், இதுவரை 550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் கொல்லபட்ட போது பாதுகாப்புக்கு வராத இந் திய கடலோர காவல் படை , இப்போது தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராட்டும் மக்களை குறிவைத்து வானில் பல நூறுமுறை பறந்து செல்கிறது. எவ்வளவு முறையிட்டும் இந்திய அரசு மக்களை காக்க இது போல விமானம் மூலம் கண்காணிக்கவில்லை . இன்று மட்டும் ஏன் இந்த விமானம் பலமுறை சுற்றிச் சுற்றி வட்டமிட்டது என�¯ �ற கேள்வியை எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.


/

Thursday 13 September 2012

மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!

மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்! மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!

மதுரையில் நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆ தரவாளர்களிடையே பெரும் அடிதடி நடந்து போராட்ட இடமே போர்க்களமாகிப் போனது.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் போலவே திமுகவிலும் இப்போது கோஷ்டிப் பூசல் கலாச்சாரம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் லேசு பாசாக இருந்த இந்த கோஷ்டிப் பூசல் இப்போது தள்ளுமுள்ளு, கை கலப்பு, அடிதடி, வார்த்தைகளை விடுதல், வாரி விடுதல் என அவதாரங்களை எடுக்க ஆரம்�® �ித்துள்ளது.

மதுரையைப் பொறுத்தவரை அண்ணன் அழகிரி கோஷ்டி மட்டும்தான் ஒரே அதிகார மையமாக இருந்து வந்தது. ஆனால் சட்டசபைத் தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் தம்பி ஸ்டாலினின் கையும் அங்கு ஓங்கத் தொடங்கி விட்டது. அழகிரி ஆதரவாளர்கள் பலரே கூட இப்போது ஸ்டாலின் பக்கம்தான் நிற்கின்றà ��ர். குறிப்பாக மதுரை நகர் மாவட்டச் செயலாளர் தளபதி இப்போது தீவிர ஸ்டாலின் ஆதரவாளராகியுள்ளார்.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் தளபதி, அழகிரி ஆதரவà ��ளர்களான முன்னாள் எம்.எல்.ஏ கவுஸ் பாட்ஷா, முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கமும் வந்திருந்தார்.

அனைவரும் மேடையில் இருந்தனர். அப்போது அழகிரி ஆதரவாளரும், சமீபத்தில் மாவட்ட அவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவருமான இசக்கிமுத்துவை மேடைக்கு வருமாறு அழைத்தனர் சிலர�¯ . இதைப் பார்த்து ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது, தடித்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் கைகள் கலக்க அந்த இடமே போர்க்களமானது. சரமாரியாக இரு தரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.< /div>
இதைப் பார்த்து போராட்டத்திற்கு வந்த தொண்டர்கள், ஸ்தம்பித்துப் போய் நின்றனர். பின்னர் போலீஸார் விரைந்து வந்து மோதலை விலக்கி விட்டனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஒப்புக்கு சில கோஷங்களைப் போட்டு மாநகராட்சியைக் கண்டித்து விட்டு மூன்றே நிமிடத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டு தளபதி உள்ளிட்டோர் அங்கிருந்து போய் விட்டனர்.

பட்டப் பகலில் பப்ளிக்கில் நடந்த இந்த கோஷ்டி மோதலால் மதுரை வட்டார திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர்.


/

இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா

இலங்கையின் தமிழினப் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கும் அதே நேரத்தில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் சிங்களருக்கு இடையூறு ஏற்படக் க ூடாது என்பதில் உறுதியாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது.

துணிச்சல் மிகக் தீர்மானங்கள்:

இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெ றும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன்.

தமிழக அரசின் எதிர்ப்பு:

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதால், அதற்கு நம் தமிழகத்தின் எதிர்ப்பை, உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை தடை செய்தேன். இவை காரணமாக, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக வாழ் தமிழர்களும் எனது அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர். எனினும் இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மீகப் பயணம் போன்றவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வரு கை புரியும் சிங்களர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் எனது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

மெளனியாக மத்திய அரசு- கருணாநிதி மீது தாக்கு:

ஆனால், தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார்.

இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கை அரசிற்கும், ராணுவத்திற�¯ �கும் ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய இடங்களில் மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், அதற்கு ஒரு வலுவான எதிர்ப்பினை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

இருப்பினும், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர், இலங்கைத் தமிழர்களுக்காக à ��ன கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார். இவ்வாறு தமிழர் மானத்தை காப்பாற்றுபவர்தான் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் எனது அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறார்.

சர்.பிட்டி தியாகரயரின் தன்மானக் கதை:

தன்மானம் பெரிது என்று வாடிநயன் தான் தமிழன். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை இந்தத் தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சர். பிட்டி தியாகராயர் என்ற ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர். பதவிக்காக எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இல்லாதவர். இவர் சென்னை மாந கராட்சியின் மேயராக சில காலம் இருந்தார். அந்த சமயத்தில், வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்திருந்தார். இளவரசரை வரவேற்பதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போதைய கவர்னரான லார்டு வெல்லிங்டன் சர் தியாகராயரைப் பார்த்து, சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் இளவரசரை முதலில் நீங்கள் தான் வரவேற்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு சர். தியாகராயரும் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் கவர்னரிடமிருந்து வேறு ஒரு தகவல் வந்தது.

இளவரசரை சந்திக்கும் போது நீங்கள் கோட், சூட் உடையில் தான் இளவரசரை வரவேற்க வேண்டும் என்பது தான் அந்தத் தகவல்.

உடனே, சர்.பிட்டி தியாகராயர் அரசாங்கத்திற்கு ஒரு பதில் எழுதினார் . அதில் என்னுடைய வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை இந்த ஆடைகளோடு என்னை இளவரசர் பார்க்க விரும்பினால் நான் அவரை உளமார வரவேற்கிறேன். இந்த ஆடையுடன் நான் அவரை பார்க்க முடியாது என்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து அமைதி பெறுவேன். இளவரசரை வரவேற்பதற்காக நான் என்னுடைய வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை என்று உறுதிபட தெரிவித்து இருந்தார்.

அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

அந்த ஆங்கிலேய அரசு பணிந்து வந்து, அவருடைய வழக்கமான உடையிலேயே இளவரசரை வரவேற்க அனுமதி அளித்தது. சர். தியாகராயர் நடந்து கொண்ட விதம் தான் தமிழனின் தன்மானம். அதனால் தான் பிரிட்ட ிஷ் அரசாங்கம் அவருடைய கோரிக்கையை ஏற்றது.

இத்தகைய தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனை சீர்குலைக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக ்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார் ஜெயலலிதா.


/

Wednesday 12 September 2012

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., ready for a.d.m.k

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., : தொகுதி வாரியாக கூட்டம் அறிவிப்பு லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., : தொகுதி வாரியாக கூட்டம் அறிவிப்பு
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., : தொகுதி வாரியாக கூட்டம் அறிவிப்பு



லோக்சபா தேர்தலுக்கு, தொண்டர்களை தயார்படுத்தும் வகையில், லோக்சபா தொகுதி வாரியாக, கூட்டங்களை நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வரும், 19ம் தேதி முதல், நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவினர், தொகுதி வாரியாக கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனர். லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றி, மத்திய அரசில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு, தேர்தல் பணிகளை, அ.தி.மு.க., முடுக்கி விட்டுள்ளது. கடந்த மாதம், 27ம் தேதி நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அ.தி.மு.க., வசம் உள்ள, சட்டசபை தொகுதிகளில், செய்ய வேண்டிய பணிகள் எவை என்ற பட்டியலையும், எதிர்க்கட்சிகள் வசம் உள்ள தொகுதிகளின் தேவைகள் குறித்த பட்டியலையும் உடனடியாகத் தயார் செய்யும், இதை கண்காணிக்க, நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவையும் ஜெயலலிதா அமைத்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன், தொகுதி வாரியாக தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்யவேண்டுமென, கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, லோக்சபா தொகுதி வாரியாக, கூட்டங்களை நடத்த, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சியின், 52 மாவட்டங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மக்கள் பணிகளை ஆற்றிடவும், அமைச்சர்கள் ஓ.பி.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், வரும், 19ம் தேதி முதல், நவ., 9ம் தேதி வரை, லோக்சபா தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்த உள்ளனர். இதில், மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், லோக்சபா தொகுதிகளைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., மன்றம், மகளிர் அணி, இளைஞர் பாசறை உள்ளிட்ட கட்சியின் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். அமைச்சர்கள் அளிக்கும் ஆலோசனைகளின் படி, கட்சிப் பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.

வரும், 19ம் தேதி காலை, மதுரையிலும், மாலை, விருதுநகரிலும் கூட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு இரு லோக்சபா தொகுதிகள் என்ற அடிப்படையில், புதுச்சேரி உள்ளிட்ட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அமைச்சர்கள் குழு பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள், நவம்பர், 9ம் தேதி வரை நடக்கிறது.

தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம்



தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம் தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம்
தமிழ்நாட்டில் மின் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவà ��கிறது. தமிழ்நாடு முழுவதும் சாதாரண நேரங்களில் 10,000 மெகாவாட் மின்சாரமும், காலை, மாலை, இரவு நேரங்களில் 12,000 மெகா வாட் மின்சாரமும் தேவைப்படுகிறது. ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. 30சதவீத மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பற்றாக் குறையை சமாளிக்க சென்னை நகரில் 1 மணி நேரமும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் கூடுதல் நேரமும் மின்வெ�® �்டு அமல் படுத்தப்படுகிறது. 

தமிழ் நாட்டில் இப்போது மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்தும், ஆரல்வாய் மொழி, பாலகாட், தென்காசி, தேனி ஆகிய இடங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றின் வேகம் அ திகரிக்கும் சமயங்களில் காற்றாலை மின்சாரம் முழு அளவில் கிடைக்கும் போது தட்டுப்பாடு ஓரளவுக்கு சமாளிக்கப்படுகிறது. ஆனால் காற்றின் வேகம் நிலையற்ற தன்மையில் இருப்பதால் சில சமயம் முழு மின்சாரமும், சில சமயம் மின் உற்பத்தியே இல்லாமலும் போய் விடுகிறது. இதலால் திடீர் என்று மின்வெட்டு அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. 

காற்றாலை மூலம் அதிக பட்சம் 2,500 மெகா வாட்டில் இருந்து 4,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. இந்த மாத இறுதியில் காற்று சீசன் முடிவடைகிறது. அடுத்து வடகிழக்கு பருவ மழை காலத்தில்தான் மீண்டும் காற்று சீசன் தொடங்கும். எனவே அடுத்த சில வாரங்களில் மின்தட்டுப்பாடு நிலைமை மோசம் அடையும் நிலை உருவாகிறது. 

தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவும் குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் உள்ள ஆந்திர மாநிலம் சிம்காத்ரி, ராமகுண்டம், ஒடிசா மாநிலம் தல்சேர், நெய்வேலி ஆகிய மின்நிலையங்களில் இருந்தும், கல்பாக்கம் அணுமின் நிலையம், கர்நாடக மாநில�® �் கைகா அணுமின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 2,481 மெகாவாட் மின்சாரத்துக்கு பதில் 1,500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. மேலும் வடசென்னை வள்ளூர் அனல் மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் காற்றாலை மின்சாரம் தான் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. அதுவும் இந்த மாத இறுதியில் குறைந்து விடும் நிலை உள்ளதால் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை இனிவரும் காலங்களில் மின்சார பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை நகரில் 1 மணி நேர மின்வெட்டு அமலில் இருந்தாலும் சில இடங்களில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு பகுதியாக நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அடுத்து வரும் காலங்களில் மின் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து மின் வாரியம் ஆலோசித்து வருகிறது.



/

Tuesday 11 September 2012

அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் ...!!!



அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் ...!!! அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் ...!!!


அரசியல் கட்சிகளுக்கு டாடா, பிர்லா, வேதாந்தா, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜிண்டால், எஸ்ஸார் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடைகளை அள்ளி வழங்கி வருகின்றன. இதில் பிர்லா நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது.

இது குறித்து ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் (Association for Democratic Reforms and the National Election Watch) திரட்டியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ள விவரம்:

பிர்லா நிறுவனத்தின் பொதுத் தேர்தல் அறக்கட்டளை 2003-04 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மட்டும் ரூ. 36.46 கோடியை காங்கிரஸ் கட்சிக்கும், ரூ. 26 கோடியை பாஜகவும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

டாடா, பிர்லா, வேதாந்தா, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜிண்டால், எஸ்ஸார் ஆகிய நிறுவனங்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு மட்டுமல்லாமல் ஒடிஸ்ஸா உள்ளிட்ட கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களைச் சேர்ந்த மாநில கட்சிகளுக்கும் ஏராளமான நன்கொடைகளைத் தந்துள்ளன.

இந்த நிறுவனங்களில் பல நிலக்கரி சுரங்க லைசென்ஸ்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது அறக்கட்டளை சார்பில் 2008-09ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 11 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 6 கோடியையும் நன்கொடையாக தந்துள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் பொது மற்றும் அரசியல் விழிப்புணர்ச்சி அறக்கட்டளை சார்பில் 2003-05ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு 9.5 கோடி தந்துள்ளது.

டாடாவின் தேர்தல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 9.96 கோடியும், பாஜகவுக்கு ரூ. 6.82 கோடியும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு ரூ. 30 லட்சமும், சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 1.58 கோடியையும் தந்துள்ளது.

ஹார்மொனி நிறுவனத்தின் தேர்தல் அறக்கட்டளை சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 2 கோடியும், பாஜகவுக்கு ரூ. 1.5 கோடியும், சத்யா நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 2 கோடியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1 கோடியையும் தந்துள்ளது.

டோரண்ட் பவர் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 14.15 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 13 கோடியையும், ஏ�® �ியாநெட் ஹொல்டிங்ஸ் நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 10 கோடியும், காங்கிரசுக்கு ரூ. 2.5 கோடியும்,

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 6 கோடியும், அதே வேதாந்தாவின் மெட்ராஸ் அலுமினியம் நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 3.5 கோடியும் தந்துள்ளது.

அதே போல சதர்ன் என்ஜினியரிங் வொர்க்ஸ், வீடியோகான் ஆகியவையும் காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனி்ஸ்ட், சரத்பவாருக்கு ஏராளமாக நன்கொடை தந்துள்ளன.

அதிமுகவுக்கு...

ஐடிசி நிறுவனம் சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 78 லட்சமும், அதிமுகவுக்கு ரூ. 55 லட்சமும், லாலுவ�® �ன் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ரூ. 33 லட்சமும் தந்துள்ளது.

மொத்தத்தில் 2004-05 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மிக அதிகமான நன்கொடை பெற்ற கட்சிகள் காங்கிரஸ் (ரூ. 2,008 கோடி), பாஜக (ரூ. 994 கோடி), மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (ரூ. 484 கோடி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (ரூ. 417 கோடி) ஆகியவை தான்




/

Sunday 9 September 2012

அண்ணா வளைவு விவகாரத்தில் புகார்: கருணாநிதியை சாடுகிறார் முதல்வர் ஜெ.,


அண்ணா வளைவு விவகாரத்தில் புகார்: கருணாநிதியை சாடுகிறார் முதல்வர் ஜெ.,




அண்ணா வளைவு விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அபாண்டமான குற்றச்சாட்டுக்களை கருணாநிதி சுமத்துகிறார். அண்ணா பவள விழா வளைவை அகற்ற நான் உத்தரவிடவில்லை, என்று, முதல்வர் ஜெயலலிதா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் கருணாநிதி, அண்ணா வளைவை இடிக்க முதலில் அனுமதியளித்து விட்டு, இடிப்பு பணிகள் பாதியள&#299 7;ு முடிந்த நிலையில், இடிக்கக்கூடாது என, நான் திடீரென உத்தரவிட்டுள்ளதாக கூறி இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போத&#300 9; தான், 117 கோடி ரூபாயில், நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணாநகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்ட அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, 2011 பொதுத் &# 2980;ேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றேன்.

உத்தரவிடவில்லை:


ஆட்சி மாற்றத்திற்குப் பின், முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக் கமாக மேற்கொள்ளப்படுவது போல், இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இந்த மேம்பா&#299 4;ப் பணி மற்றும் வளைவு அகற்றப்படுவது குறித்து என்னை யாரும் கலந்தாலோசிக்கவும் இல்லை; நான் அகற்ற உத்தரவிடவும் இல்லை.அரசின் அனைத்து முடிவுகளும், முதல்வர் ஒப்புதல் ப ெற்று வெளியிடப்படுவதில்லை என்பது, ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா? அரசு நிர்வாகம் எப்படி செயல்படும் என்று தெரியாமலேயே முதல்வராக காலத்தை தள&#30 21;ளிவிட்டு, இதுபோன்ற கேள்வியை தனக்கு தானே எழுப்பி பதிலளிக்கிறாரா? என்பதற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும்.

அள்ளி வீசும்:


கடந்த ஆட்சியில், மேம்பாலம் அமைக்க, முடிவெடுக்கப்பட்ட போதே, அண்ணா நினைவு வளைவு வழியாகத் தான் பாலம் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பது கருணாநிதிக்கு தெர& #3007;யாதது எப்படி. ஒரு வேளை, சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த வளைவை, அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த மேம்பாலப் பணிக்கு அவர் வழங்கிய உத்தரவு, என்னால் த&#297 5;ைபட்டு விட்டதே, என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போல் உள்ளது.எது எப்படியோ, முந்தைய தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவு, என் கவனத்திற்கு முன்பே கொண்டு வரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் உத்தரவிட்டிருப்பேன்.அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து, பத்திரி&#2965 ;ைகளில் வந்த செய்திகளின் மூலம் நான் அறிந்து, பணியை உடனடியாக நிறுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், இந்த வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியினை நிறைவேற்&# 2993; ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கலாம் என்றும் உத்தரவிட்டேன்.

அதன் அடிப்படையில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு நடத்தி, ஈ.வெ.ரா., சாலையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மேம்பாலத்தை, சிறிது கிழக்குப் புறமாக மாற்றியமைத்து, மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தேன். இதன் மூலம் வளைவு அகற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்&#2 965;ிருக்கக் கூடாது என்ற தன் தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா என்பதை கருணாநிதி தான் தெளிவு படுத்த வேண்டு ம்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.