Followers

Thursday 22 March 2012

இதெல்லாம் ஒரு தோல்வியா?... விஜயகாந்த் பேச்சு!

 
 
 
இடைத் தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு சடங்காக மாறி விட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 முறை இடைத் தேர்தல்களில் அதிமுக தோல்வியுற்றது. எனவே சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறி கொடுத்தது. இதுகுறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பண பலத்தைப் பிரயோகித்து இந்தத் தேர்தலை சந்தித்தது ஆளும் கட்சியான அதிமுக.
 
இந்தத் தேர்தலே உழைப்பிற்கும், பண பலத்திற்கும் இடையிலான போட்டியாகவே இருந்தது. அதில் பண பலம் வென்றுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 இடைத் தேர்தல்கள் நடந்தன. அதில் ஒன்றில் கூட அதிமுக வென்றதில்லை.
 
பொதுத் தேர்தலில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், இடைத் தேர்தல்களில் பிரதிபலிப்பதில்லை. மேலும் தமிழகத்தி்ல இடைத் தேர்தல் என்பது ஒரு சடங்காக மாறி விட்டது. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
 
தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக உழைப்போம், தொடர்ந்து போராடுவோம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.



சங்கரன்கோவில் சவாலை முறியடித்தார் ஜெ ...!

 

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி ஜெயிப்பது என்பது நடைமுறை தான் என்றாலும் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரால் விடப்பட்ட சவாலால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சம்பிரதாயமாக இல்லாமல் சண்டைக்களமாக மாறியது ...

கடந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சியமைத்ததிலிருந்தே கூட்டணி கட்சியான தே.மு.தி.க வுடன் புகைச்சல் ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே ... உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வெளியிட்டதிலிருந்தே புகைச்சல் நேரடி சண்டையாக மாறியது ...

உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றாலும் தே.மு.தி.க படு தோல்வியை சந்தித்ததிலிருந்து அ.தி.மு.க விற்கு மாற்று தி.மு.க தான் என்பது மேலும் ஊர்ஜிதமாகியது ... இந்த தோல்வியிலிருந்து தே.மு.தி.க பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை... அ.தி.மு.க வுடனான கூட்டணியால் தான் தன்னால் எதிர்க்கட்சி தலைவராக முடிந்தது என்பதை முற்றிலும் மறந்த விஜயகாந்த் தன்னால் தான் ஜெயலலிதாவால் அரியணை ஏற முடிந்தது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார் ...



விலைவாசி உயர்வு தொடர்பான சட்டசபை விவாதத்தின் போது போது இது வெளிப்படையாக தெரிந்தது ... உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாள் பால் , பஸ் டிக்கெட் விலைகளை ஏற்றாததற்கு தோல்வி பயம் தானே காரணம் என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி முதல்வருக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாகவே இருந்தது ...

நிச்சயம் விலையேற்றத்தையும் மீறி மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்ற முதல்வரின் நம்பிக்கை வீண்போகவில்லை , அதே சமயம் எல்லா அமைச்சர்களும் அந்த தொகுதியில் வட்டமடித்ததிலிருந்தே பண விநியோகம் நிறைய நடந்திருக்கும் என்று மற்ற கட்சிகள் முன் வைக்கும் வாதத்தையும் மறுப்பதற்கில்லை ...

விலையேற்றத்தையும் தாண்டி தினமும் ஆறு மணி நேரத்திற்கு மேல் ஏற்படும் மின் தடங்கலே தொகுதி மக்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது என்பதை உணர்ந்த ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பேசிய போது சாக்கு போக்கு எதுவும் சொல்லி பொறுப்பை தட்டி கழிக்காமல் வரும் ஜூன் மாதத்திற்குள் மின் பற்றாக்குறை தீர்த்து வைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது ...

தேர்தல் முடிந்த அடுத்த நாளே கூடங்குளம் அணுமின் நிலைய வேலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே அவர் சொன்னதை செய்வதில் முனைப்புடன் இருக்கிறார் என்பது தெள்ள தெளிவாகிறது ... அ.தி.மு.க 68000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பதும் , தே.மு.தி.க நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது ...

Monday 19 March 2012

அறிவிப்போடு நின்றுபோன கருணாநிதியின் உண்ணாவிரதம் part -2

 
 
 
அன்று வெறும் 3 மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து ஈழப் போரையே 'நிறுத்தினார்' திமுக தலைவர் கருணாநிதி. ஆனால் இன்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, அதைத் தொடங்காமலேயே ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 'வெல்ல வழி வகுத்து விட்டார்' கருணாநிதி.
 
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்பதை சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது போல பிரதமர் மன்மோகன் சிங் பேசிய நிலையில், உடனடியாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதாகவும், உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திற்கு அவசியமில்லை என்றும், பிரதமரின் அறிவிப்பு ஈழப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிரடியாக பேசியுள்ளார் கருணாநிதி.
 
முன்னதாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கருணாநிதி தலைமையில் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டது. மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறும் என்று முன்னதாக திமுக தலைமை இன்று காலை அறிவித்திருந்தது.
 
அண்ணா அறிவாலயம் வளாகத்தில் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பார். மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகர்களில் கட்சியினர் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும் அது கூறியிருந்தது.
 
இந்த நிலையில்தான் லோக்சபாவில், பிரதமர் இதுதொடர்பாக விளக்கம் அளித்துப் பேசினார். இதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார். அவரது பேச்சு திருப்தி தருவதாகவும், வெற்றி என்றும் கூறி தனது போராட்டத்தையும், உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தையும் சேர்த்து கைவிட்டு விட்டது திமுக.
 
கருணாநிதியின் முந்தைய உண்ணாவிரதம்
 
ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த கடைசி நாட்களில், இப்படித்தான் கருணாநிதி ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து மெரீனா பீச்சில் போய் படுத்தார். வெறும் 3 மணி நேரமே அந்த உண்ணாவிரதம் நீடித்தது.
 
காலையில் வாக்கிங் போனவர் நேராக பீச்சுக்குப் போய் கட்டிலில் படுத்து விட்டார். கூடவே மனைவி தயாளு அம்மையார், துணைவி ராசாத்தி அம்மையார், மகள் கனிமொழி, திமுக தலைவர்கள் என தடபுடலாக தொடங்கியது போராட்டம்.
 
ஆனால் 3 மணி நேரத்திலேயே போராட்டத்தை முடித்து விட்டார்கள். மத்திய அரசு ராஜபக்சேவிடம் நேரடியாகப் பேசி விட்டது. போர் நிறுத்தப்பட்டு விட்டது. குண்டு வீச்சு நின்று விட்டது. தமிழர்கள் அத்தனை பேரும் பத்திரமாக உள்ளனர் என்று கூறி பேட்டியளித்து விட்டு கிளம்பிப் போனார் கருணாநிதி.
 
ஆனால் அதற்குப் பிறகுதான் போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த பல ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொத்து குண்டுகளை வீசி கொடூரமாகக் கொன்று குவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
 
இந்த நிலையில் இப்போதும் ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து அதை தொடங்கக் கூட வாய்ப்பில்லாமல் முடித்தும் விட்டது திமுக.