Followers

Thursday 8 March 2012

எங்க பசிக்கு ஓட்டு போடுங்க: வைகோ

 
 
 
பசியோடு இருப்பவர்களுக்கு தான் சோறு போட வேண்டும். எங்களுக்கு கடுமையான பசி உள்ளது. எனவே மதிமுக வேட்பாளருக்கு வாய்ப்பளியுங்கள் என வைகோ பேசினார்.
 
சங்கரன்கோவில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது,
 
இடைத்தேர்தலில் மதிமுக வெற்றி பெறுவதன் மூலம் சங்கரன்கோவில் தொகுதிக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் நன்மை கிடைக்கும். ரூ.50 கோடி வரை செலவு செய்து வெற்றி பெற்றால் அவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும். செலவு செய்த பணத்தை 4 மடங்காக ரூ.200 கோடியாக எடுப்பார்கள்.
 
வாக்காளர்களை விலைக்கு வாங்க பணம் கொடுக்கின்றனர். மக்களை உயிராக நேசிக்கிறேன். நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மாசோதா கொண்டு வந்த ஒரே எம்.பி. நான்தான். போலீசை கூப்பிட வேண்டும் என்றால் 100க்கும், தீயணைப்பு துறைக்கு 101ம், ஆம்புலன்சுக்கு 108ம் போன் செய்வதை போல வெளிநாட்டில் ஒரு பிரச்சனை என்றால் எனக்கு தான் போன் செய்கிறார்கள். பசியோடு இருப்பவர்களுக்கு சோறு போட வேண்டும். எங்களுக்கு கடுமையான பசி. எனவே, மதிமுக வேட்பாளருக்கு வாய்ப்பளியுங்கள். அதிமுக வெற்றி பெற்றால் எந்த அமைச்சரும் தொகுதி பக்கம் வரமாட்டார்கள்.
 
பணம் கொடுத்து வாக்குகள் பெறும் ஊழல் அரசியலை ஒழிக்க வேண்டும். சாதி, மத எல்லைகளைக் கடந்து போராடி வரும் மனித நேயத்துடன் விளங்கும் எங்களுக்கு வாய்ப்பளியுங்கள். பதவிக்காக ஏங்கி பேசவில்லை. எனக்கு பல முறை அமைச்சர் பதவி தேடி வந்தும் வேண்டாம் என்றேன். சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் பற்றி பேச வாய்ப்பளியுங்கள் என்றார்.



அடிச்சுச் சொல்லும் விஜயகாந்த்?

 
 
 
என் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கூட அங்கு போக மாட்டார்கள். அடித்து சொல்கிறேன். பேசிப் பார்த்தார்கள். படியவில்லை. உங்களுக்காக வேலை செய்த போதே எங்களை மதிக்கவில்லை. இப்போதுதானா மதிக்க போகிறீர்கள் என்று எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறி விட்டனர். கோவை அருகே சூலூரில் நடந்த கட்சித் திருமண விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:



பஸ் கட்டணத்தை ஏன் உயர்த்துகிறீர்கள்? என்று கேட்டதற்கு தான் சங்கரன் கோவிலில் தைரியம் இருந்தால் தனியாக நின்று பாருங்கள் என்று சவால் விட்டனர். நான் கேட்டது மக்கள் பிரச்சினை. ஆனால் அவர்கள் சொன்னது தொகுதி பிரச்சினை. மக்கள் பிரச்சினைக்கு பதில் சொல்லுங்கள் என்று தான் அன்று கேட்டேன்.


அதற்கு விஜயகாந்த் சஸ்பெண்ட். பட்ஜெட்டில் பேசக்கூடாது என்று கூறினார்கள். நான் பேசவில்லை. நான் இதோ இருக்கிற மக்கள் மன்றத்தில் பேசுகிறேன். என்னை நீங்கள் கையை கட்டி, வாயை பொத்தி மூலையில் தூக்கிப் போட்டால் விஜயகாந்த் சும்மா இருப்பானா?. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என்னை அடக்க நினைத்தால் அது நடக்காது.


கூடங்குளத்துக்கு நான் அரசியல் செய்ய செல்லவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக தான் செல்கிறேன். அரசியல் செய்யும் களம் வேறு. நான் சென்று விட்டேன் என்பதற்காக கூடங்குளம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார்கள். ஆனால் இப்போது அணு உலையை ஆய்வு செய்ய குழு அமைக்கிறார்கள். ஏன் இப்படி மக்களை குழப்புகிறீர்கள்?. சட்டசபையில் மக்கள் குறைகளை தான் பேச முடியும்.


சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. முதல்-அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் பேசுகிறார்கள். ஒரு தொகுதிக்கு 32 அமைச்சர்கள் ஏன் வேலை பார்க்கிறார்கள்.


வட இந்தியாவில் பாடம் புகட்டியதை போன்று இங்கும் பாடம் புகட்ட வேண்டும். உங்களுக்கு தெரியும் உத்தரபிரதேச தேர்தலில் என்னவெல்லாமோ சொன்னார்கள். ஆனால் மக்கள் மவுனமாக வந்து வாக்களித்தனர். நிலைமையே அங்கு மாறி விட்டது. அந்த மாதிரி இங்கும் சத்தமில்லாமல் வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தெரியக்கூடாது. யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள்.


விலைவாசியெல்லாம் ஏன் கூடிப்போச்சு. விவசாயிகளுக்கு கரண்ட் இல்லை. அது வரும் போது வரும் என்று பதில் அளிக்கிறார்கள். பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். சந்தோஷம். படிக்கும்போது கரண்ட் வருமா? என்றால் வராது. படித்தால் தானே பரீட்சை எழுத முடியும். படிப்பதற்கு கரண்ட் கொடுக்காமல் பரீட்சை எழுதுவதற்கு மட்டும் கரண்ட் கொடுக்கிறார்களாம். படிக்கும் போது கரண்ட் கொடு என்று தான் கேட்கிறேன். மாலை 6 மணிக்கு மேல் கரண்ட் கொடுத்தால் தானே பரீட்சைக்கு படிக்க முடியும்.


விஜயகாந்த் சங்கரன்கோவில் தொகுதிக்கு சென்றால், 10 போஸ்டர் அடித்தால் அந்த செலவை அங்குள்ள வேட்பாளர் கணக்கில் எழுதுகிறீர்கள். இதை கேட்டால் தேர்தல் கமிஷனுக்கு அதிக பவர் என்று சொல்கிறார்கள். என்ன பவர்? இது தானா பவர்? 100 பேனர் தான் வைக்க வேண்டும். அதற்கு மேல் வைக்க கூடாது என்று சொல்கிறார்களே. இது தானா பவர். எத்தனை பேனர் வைத்தால் என்ன? காலையில் வைத்தால். மாலையில் எடுத்துவிடப் போகிறார்கள்.


போலீசார் தங்கள் கடமையை மறந்து செயல்படுகிறார்கள். நாட்டில் எவ்வளவோ திருட்டு நடக்கிறது. அதை போய் பிடியுங்கள். இங்கு விஜயகாந்துக்கு பேனர் வைத்தால் அதை வைக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். திருப்பூரில் ஒரு நகை கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு போய் விட்டது. அதை பிடித்தார்களா?. பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. ஏனென்றால் சங்கிலியை பறித்து விடுகிறார்கள். காவல் துறையினர் இவற்றை கவனிப்பதில்லை. ஆனால் என்னுடைய பேனர் வைப்பதற்கு மட்டும் போலீசார் தடை போடுகிறார்கள்.


யார் ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்று பாருங்கள். திருப்பூரை சேர்ந்த என் கட்சிக்காரர் ஒருவர் முன்பு மாதத்துக்கு 9 லட்சம் ரூபாய் கரண்ட் பில் கட்டினார். ஆனால் இப்போது இரண்டரை லட்சம் ரூபாய்க்கு தான் கரண்ட் பில் கட்டுகிறார்.


நான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று எப்போதுமே விரும்பியதில்லை. மக்களாக பார்த்து அளித்த பதவி அது. அன்று நான் ஒரு எம்.எல்.ஏ. இன்றும் ஒரு எம்.எல்.ஏ.


என் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கூட அங்கு போக மாட்டார்கள். அடித்து சொல்கிறேன். பேசிப் பார்த்தார்கள். படியவில்லை. உங்களுக்காக வேலை செய்த போதே எங்களை மதிக்கவில்லை. இப்போதுதானா மதிக்க போகிறீர்கள் என்று எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறி விட்டனர்.


என் தொகுதியான ரிஷிவந்தியத்தை சேர்ந்த ஒருவருக்கு பட்டா கேட்டு கடிதம் எழுதினால், நீங்கள் 10 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளீர்கள் என்று பதில் கடிதம் வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. அந்த வழக்கில் வாதாடுவதற்காக டெல்லியில் இருந்து வக்கீல் வருகிறார்கள். மக்களாகிய நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ. பதவியையே செல்லாது என்று இவர்கள் எப்படி சொல்லலாம். அவர்களால் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய முடியாது. கட்சித் தலைவர் பதவியிலிருந்து மட்டும் என்னை எடுக்கவே முடியாது. அந்த பதவியிலிருந்து தான் உங்களிடையே பேசுகிறேன் என்றார் அவர்.

பரிதி இளம் வழுதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

 
 
 
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் சாந்தோம், ராயப்பேட்டை, பாலவாக்கம் உட்பட 5 இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறது. சென்னை அயனாவரத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.



பேசாம விஷம் வச்சுக் கொன்னுடுங்க.. நடராஜன் குமுறல்

 
 
 
சொத்து குவிப்பு வழக்கில் எங்களின் மீது முதல்வருக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், குடும்பத்தோடு விஷம் கொடுத்து எங்களைக் கொன்றுவிடலாம் என்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
 
தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் கொடுத்த புகாரில், நடராஜன் மீதும் நடராஜன் டிரைவர் பிரபு, அவருடைய மாமா சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக நேற்று மாலை திருச்சியில் இருந்து தஞ்சைக்கு நடராஜனை போலீசார் அழைத்துச் சென்றனர்.
 
தஞ்சாவூர் ஜெஎம் 2 நீதிமன்ற நீதிபதி முருகனிடம், நடராஜனை போலீசார் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு நீதிமன்றத்தில் இருந்து போலீசாரால் வெளியே கொண்டு வரப்பட்ட நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
என் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு. நான் சிறையில் இருப்பதால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்த நன்மையும் இல்லை. கேடு தான் வரும். உயர்நீதிமன்றத்தில் எனக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், அந்த ஆத்திரத்தில் தற்போது இன்னொரு பொய் வழக்கை போலீசார் போட்டுள்ளனர்.
 
திமுக ஆட்சியில் போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதாவுக்கு சம்மந்தம் இல்லை. அதற்கு நான் தான் பொறுப்பு என்று எனது மனைவி சசிகலா அனைத்து சுமைகளையும் ஏற்று கொண்டார்.
 
முதல்வருக்கு சந்தேகமிருந்தால் சென்னை அண்ணாநகர் ரமேஷ் (தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நெருங்கிய நண்பர்) போல, எங்களையும் குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும். அந்த விஷத்தை குடித்துவிட்டு நாங்கள் சாகத் தயாராக இருக்கிறோம்.
 
பெங்களூரு நீதிமன்ற வழக்கில் எனது மனைவி சசிகலா, ஹனுமான் போல நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார். எனவே எங்கள் மீது முதல்வருக்கு சந்தேகமோ, பயமோ தேவையில்லை என்றார்.



பெங்களூர் கோர்ட் கலவரம்... போலீஸை காப்பாற்ற சசி தந்த ஐடியா!

 
 
 
பெங்களூர் பத்திரிகையாளர்களுக்கும் கர்நாடக வழக்கறிஞர்களுக்கும் இடையே ஒரு மாத காலமாக பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றமும் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில்தான் இருக்கிறது.
 
கடந்த வாரம் வெளியே வழக்கறிஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே முறுகல் தொடங்கிய அதே நேரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, சசிகலாவை கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
 
டான்சி நில மதிப்பீடு, சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் கம்பெனி பற்றிய கேள்விகளுக்கு சசிகலா "தெரியாது' என பதில் சொல்லிக் கொண்டிருந்தபோதே வெளியில் வன்முறை வெடித்தது.
 
காதை பிளந்த கல்லெறி சம்பவங்களைப் பற்றியெல்லாம் அசராத நீதிபதி மல்லிகார்ஜூனையா, ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், மார்பிள்ஸ் அண்ட் மார்வெல்ஸ், ஜெயா பப்ளிகேஷன் என பல்வேறு நிறுவனங்கள், கைப்பற்றப்பட்ட நகைகள் பற்றி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.
 
நகைக் குவியல்- அசரா சசி
 
நகைகள் குறித்த கேள்விகள் எழத்தொடங்கியபோது சசிகலாவின் முகம் குழப்பத்தில் தத்தளித்தது.
 
'நல்லம்ம நாயுடு தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 36, போயஸ் கார்டன், சென்னை என்ற முகவரியில் 1996ம் ஆண்டு சோதனை நடத்தியபோது, 97 நகைப் பெட்டிகளில் இருந்த 23 கிலோ 113 கிராம் தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன. இதில், தங்க நகையின் மதிப்பு 91 லட்சத்து 71 ஆயிரத்து 571 ரூபாய், வைர நகைகளின் மதிப்பு 2 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய். இதன் மொத்த மதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 15 ஆயிரத்து 43 ருபாய் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது பற்றி சாட்சியம் கூறி இருக்கிறார்களே என்ற கேள்வியை, இரண்டு மூன்று முறை சரியாகக் கேட்டு எழுதிக்கொண்டார்.
 
பிறகு போயஸ் தோட்டத்து வழக்கறிஞரின் முகத்தைப் பார்த்த சசிகலா ஆழமாக யோசித்து, '36, போயஸ் கார்டன், சென்னை முகவரியில் போலீஸார் சோதனையிட்டபோது, நானும் செல்வி ஜெயலலிதாவும் சிறையில் இருந்தோம். இந்தச் சோதனை வீட்டு உரிமையாளர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில் நடக்கவில்லை. சட்டப்படி வீட்டு உரிமையாளர் முன்னிலையில்தான் நடந்திருக்க வேண்டும் அல்லது அவரது அனுமதி பெற்றாவது நடந்திருக்க வேண்டும். அதைவிட்டு, வீட்டு ஊழியர்களை கார் ஷெட்டில் வலுக்கட்டாயமாக அடைத்துவிட்டு சோதனை நடத்தியது சரிதானா? என்று எதிர்க் கேள்வி கேட்டு எகிறினார்..
 
நீதிபதியும் விடவில்லை..
 
'வாசுதேவன் அளித்துள்ள சாட்சியத்தில் 31 ஏ, போயஸ் கார்டன் வீட்டில் 42 நகைப் பெட்டிகளை எடுத்ததாகவும், அதில் 4 கிலோ 475 கிராம் தங்க, வைர நகைகள் இருந்ததாகவும், தங்க நகையின் மதிப்பு 17 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய் என்றும், வைர நகைகளின் மதிப்பு 30 லட்சத்து 24 ஆயிரத்து 550 ரூபாய் என்றும் கூறி இருக்கிறார். கூடவே சில விலை உயர்ந்த கைக்கடிகாரங்களைக் கைப்பற்றியதாகவும் கூறி இருக்கிறாரே? என்றார் நீதிபதி மறுபடியும்.
 
சசியும் விடாக்கொண்டன் போல 'முதலில் 31 ஏ போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த முறையான அனுமதி பெறவில்லை. சோதனையின்போது 42 பெட்டிகள் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வீட்டு உரிமையாளர் இல்லாமல் சோதனை நடத்தியதே தவறு என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு இது பற்றி எழுத்து மூலமாகப் பதில் அளிக்கிறேன்' என்றார்.
 
சசிகலா ஐடியா
 
இந் நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நீதிமன்ற அறைக்குள் வழக்கறிஞர்கள் தாக்குதலில் இருந்து தப்பிய சில போலீசார் நுழைந்தனர். உடனே நீதிமன்ற அறையின் கதவை உட்புறமாக போலீசார் ஒருவர் தாழிட்டார்.
 
இது தான் சாக்கு என உடனே சசிகலாவின் வழக்கறிஞர் விசாரணையை ஒத்திவைக்கக் கோரினார். ஆனால் நீதிபதியோ எல்லாம் சரியாகிவிடும் காத்திருங்கள் என்று கூறி விசாரணையையும் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
 
சுமார் 55 நிமிடங்கள்... எந்த விசாரணையும் இல்லை..
 
இந்நிலையில் உள்ளே இருந்த போலீசாரின் பாதுகாப்புக்காக உடைகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் எங்கே உடைகளை மாற்றுவது என்று பூட்டப்பட்ட நீதிமன்றத்துக்குள் அனைவரும் ஆலோசித்துக் கொண்டிருக்க சட்டென சசிகலாவோ, நீதிபதி அறையில் மாற்றலாமே என்றார்.. இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
 
'பாதுகாப்புக்கு வந்த உங்களுக்கே நாங்க பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கு என்று போலீஸாரைப் பார்த்து நீதிபதி கமென்ட் அடிக்க, சசிகலாவும் அதை ரசித்தார்.
 
அதன் பின்னர் சுதாகரனின் வழக்கறிஞர் தர்மாராவ், வெளியில் நடந்த சம்பவங்களை நீதிபதியிடம் விவரித்தார்.
 
இதுதான் சாக்கென எண்ணிய சசி தரப்பு, நீதிபதியின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்..இதனால் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவையுங்கள் என்றார்.
 
இதையடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட, நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக 142 படிகள் இறங்கி காரில் ஏறிக் கிளம்பினார் சசிகலா.
 
விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதால் சந்தோஷமாக‌ இளவரசியுடன் அன்று மாலையே சென்னைக்கு விமானத்தில் பற‌ந்துவிட்டார் சசிகலா.



Tuesday 6 March 2012

தனி மெஜாரிட்டியை நோக்கி முலாயம் சிங்: காங்கிரஸ் ஆதரவு தேவையில்லை?!

 
 
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால் அங்கு ஆட்சியைப் பிடிக்க அந்தக் கட்சிக்கு காங்கிரசின் ஆதரவு தேவைப்படாது என்று தெரிகிறது.
 
அந்த மாநில சட்டமன்றத்தில் 403 இடங்கள் உள்ளன. இங்கு ஆட்சியைப் பிடிக்க குறைந்தபட்சம் 202 இடங்கள் தேவை. ஆனால், காலையில் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, முலாயம் சிங் யாதவால் அதிகபட்சம் 188 இடங்களையே பிடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், பிற்பகலில் அந்தக் கட்சி 202 இடங்களை தனித்தே பிடிக்கும் நிலைக்கு முன்னேறிவிட்டது.
 
மாயாவதியின் பகுஜன் சமாஜ் 96 இடங்களிலும், காங்கிரஸ் 47 இடங்களிலும் பாஜக 49 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் 12 இடங்களில் முன்னணியில் உள்ளன.
 
இதனால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முலாயம் சிங்குக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படாது. சில இடங்கள் குறைந்தாலும் அதை சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் அவர் சமாளித்துவிட முடியும் நிலை உருவாகியுள்ளது.
 
முன்னதாக மெஜாரிடிக்குத் தேவையானதை விட 20 இடங்கள் முலாயம் சிங்குக்குக் குறைவாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் அவர் காங்கிரசின் ஆதரவைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
மத்தியில் காங்கிரஸ் அரசை முலாயம் சிங் தானாகவே வெளியில் இருந்து ஆதரித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தத் ட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பெரிய அளவில் பெரும்பான்மை கிடைத்திருக்காவிட்டாலும் ஒரு பெரிய நிம்மதி என்னவென்றால், மாயாவதியின் பகுஜன் சமாஜுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய தோல்வி தான்.
 
ஒருவேளை மாயாவதியின் கட்சியும் 150 இடங்களில் வென்றிருந்தால், அவரும் பாஜகவும் கூட்டணி அமைத்து எந்த நேரத்திலும் முலாயம் சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, அவர்கள் ஆட்சியமைக்க முயன்றிருப்பர்.
 
மாயாவதியைப் பொறுத்தவரை பதவிக்காக எந்த வகையான கூட்டணிக்கும் அவர் தயார் தான். அதே போல காங்கிரசும் மாயாவதியுடன் சேர்ந்து கொண்டு முலாயம் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றிருக்கும்.
 
ஆனால், இப்போது உள்ள சூழ்நிலையில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் தான் முலாயம் அரசைக் கவிழ்க்க முடியும். இதில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி என்பது சாத்தியமே இல்லாத விஷயம்.



மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்வும் ராகுல்

 
 
 
காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர், நாளைக்கே பிரதமர் பதவி கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படக் கூடியவர், அலெக்சாண்டர் போல் பிரமாதமான தலைவர் என்றெல்லாம காங்கிரஸாரால் கோஷ்டி கானம் பாடப்பட்டு வரும் ராகுல் காந்திக்கு ஐந்து மாநிலத் தேர்தலில் மீண்டும் ஒரு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. அவரது உத்திகளுக்குக் கிடைத்த பெரும் அடியாக இது கருதப்படுகிறது.
 
பெரிய சோகம் என்னவென்றால், தான் எம்.பியாக உள்ள அமேதி தொகுதிக்குட்பட்ட அத்தனை சட்டசபைத் தொகுதிகளையும் அவரது கட்சி சமாஜ்வாடியிடம் பறி கொடுத்திருப்பதுதான். இதுதான் காங்கிரஸை நடுநடுங்க வைத்துள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸின் கொள்கை வகுப்பு, தேர்தல் உத்திகள், வேட்பாளர் தேர்வு என பல முக்கிய விஷயங்களை ராகுல் காந்தியிடம் தூக்கிக் கொடுத்து விட்டனர். இதனால் பிரதமரை மதிக்கக் கூடத் தேவையில்லை என்ற அளவுக்கு காங்கிரஸார் போய் விட்டனர். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான், என்ற அளவுக்கு அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, இப்போது ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் ராகுல் காந்தியின் கொள்கை பலத்த அடியை வாங்க ஆரம்பித்துள்ளது.
 
பீகார் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய மரண அடியை இன்னும் கூட அக்கட்சியினர் மறந்திருக்க முடியாது. அதேபோல ஒரிசாவிலும் ராகுல் காந்தியின் உத்திகளுக்கு பலத்த அடி கிடைத்தது. தமிழகத்திலும் ராகுல் காந்தியின் அணுகுமுறைகள் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கேவலமான தோல்வியையே தழுவியது.
 
இப்போது உ.பியிலும், பஞ்சாபிலும், கோவாவிலும் காங்கிரஸ் வாங்கியுள்ள அடியைப் பார்த்தால், இந்த மாநில மக்களும் ராகுல் காந்தியை ஏற்கவில்லை என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 
உ.பியில்தான் ராகுல் காந்தியின் அணுகுமுறை பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல தொகுதிகளையும் அந்தக் கட்சி நழுவ விட்டுள்ளது. முலாயம் சிங் யாத்வையும், மாயாவதியையும் தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ராகுல் காந்தி. தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அடித்த ஸ்டண்ட்டைப் பார்த்தபோது அனைவருமே வியந்து போயிருந்தனர். ஒருவேளை காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்று விடுமோ என்று கூட நினைக்கத் தோன்றியது.
 
ராகுல் காந்திக்கு உதவி புரிய சகோதரி பிரியங்கா காந்தி, தனது கணவருடன் உ.பியில் முகாமிட்டு ஊர் ஊராகப் போய் வந்தார். ராகுல் காந்தி போகாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு ஷேவிங் செய்யக் கூட நேரமில்லாமல் தாடியுடன், உ.பியை வலம் வந்தார்.நடந்து போனார், விவசாயிகளுடன் உட்கார்ந்து பேசினார், குடிசைகளுக்குள் புகுந்து சாப்பிட்டார், இன்னும் என்னவெல்லாமோ செய்தார். ஆனால் கடைசியி்ல வாக்குகளைப் பெறத் தவறி விட்டார்.
 
இதில் கிளைமேக்ஸ் என்னவென்றால் தனது அமேதி தொகுதியில் ஒரு சட்டசபைத் தொகுதியில் கூட அவரால் காங்கிரஸை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்பதுதான். அமேதி எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபைத் தொகுதிகளையும் சமாஜ்வாடி பிடித்து விட்டது. இது ராகுல் காந்திக்கு பெருத்த அவமானமான செய்தி என்பதில் சந்தேகமில்லை. தனது சொந்தத் தொகுதியைக் கூட அவரால் தக்க வைக்க முடியவில்லை.
 
ராகுல் காந்தியின் புயல்வேகப் பிரசாரம் காங்கிரஸுக்குக் கை கொடுக்கவில்லை. அவரது தேர்தல் உத்திகள், அணுகுமுறைகளுக்கும் பெரும் தோல்வியாக மாறியுள்ளது.
 
உ.பியைப் போலவே பஞ்சாபிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியுள்ளது. கோவாவில் ஆட்சியை பாஜகவிடம் பறி கொடுத்து விட்டது. மணிப்பூரை மட்டுமே தக்க வைத்துள்ளது. அதுவும் கூட அந்த மாநில முதல்வர் இபோபிசங்கின் தனிப்பட் செல்வாக்குதான் காரணமே தவிர காங்கிரஸின் செல்வாக்கு அல்ல.
 
உ.பியில் கடந்த முறை வாங்கியதை விட சில சீட்களை கூடுதலாகப் பெற்றுள்ளது காங்கிரஸ். உத்தரகாண்ட்டில் கூட பாஜகவிடமிருந்து ஆட்சியை இன்னும் அது முழுமையாக பறிக்கவில்லை, இழுபறிதான் காணப்படுகிறது. மொத்தத்தில் ஐந்து மாநில பொதுத் தேர்தல் ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸுக்கும் பெருத்த ஏமாற்றம்தான்.
 
இளைஞர் காங்கிரஸாரை மட்டுமே நம்பி அவர் களப் பணியாற்றுவது பலன் தராது என்பது புரிந்து போய் விட்டது. மேலும் அவரது அதிபுத்திசாலித்தனமான பேச்சுக்களும் மக்களிடம் எடுபடவில்லை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.
 
இனியும் காங்கிரஸ் மேலிடம் ராகுலை முழுமையாக நம்பியிருப்பது எந்த அளவுக்கு அந்தக் கட்சிக்கு உதவும் என்பதும் புரியவில்லை.



தேர்தல் முடிவுகள் - காங்கிரஸை "கை" கழுவிய மக்கள் ...

 

த்திரபிரதேசம் , பஞ்சாப் , உத்ராகந்த் , மணிப்பூர் , கோவா என ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன ... இதில் உ.பி , பஞ்சாப் தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்களுக்கிடையே அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது , குறிப்பாக 403 தொகுதிகள் அடங்கிய உ.பி யில் ஆட்சியை பிடிப்பவர்கள் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது அரசியல் வரலாறு ...

அதனால் தான் மாநில கட்சிகளான எஸ்.பி , பி.எஸ்.பி இரண்டுடனும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸ் , பி.ஜே.பி ஆகிய தேசிய கட்சிகளும் மிகுந்த வலிமையுடன் களத்தில் இறங்கின ... எப்போதுமே குடும்ப அரசியலை நம்பாத பி.ஜே.பி உமாபாரதியை நட்சத்திர பேச்சாளராக களமிறக்க , காங்கிரஸ் வழக்கம் போல ராகுல் காந்தியை களமிறக்கியது ...



இந்த தடவையும் ராகுல் காந்தி கூட்டிய 200 க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களுக்கு கை தட்ட கூட்டம் கூடியதே ஒழிய " கை " க்கு ஒட்டு போடுவதற்கு அல்ல என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றன ... பீகார் , குஜராத் தேர்தல்களை தொடர்ந்து ராகுல் மீண்டும் மண்ணை கவ்வியிருப்பது அவர் மீடியாக்களை கவர்ந்த அளவிற்கு மக்களை கவரவில்லை என்பதையே காட்டுகிறது ...

2007 ஆம் ஆண்டு தேர்தலில் 22 இடங்களை மட்டும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 37 இடங்களை கைப்பற்றியிருந்தாலும் , கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் 95 தொகுதிகளை கைவசம் வைத்திருந்த காங்கிரசிற்கு இது பெரிய அடி ... எதிர்பார்த்ததை போலவே தனிப்பெரும் கட்சியாக 224 தொகுதிகளை கைப்பற்றியுருக்கும் எஸ்.பி தனித்து ஆட்சியமைக்க போவது உறுதியாகிவிட்டது ... இந்த வெற்றிக்கு முலாயம் சிங்கின் புதல்வன் அகிலேஷின் பங்கு மகத்தானது என கூறப்படுகிறது ...

80 சீட்களை மட்டும் வென்ற பி.எஸ்.பி ஆட்சியை இழந்து விட்டது ... சட்டம் , ஒழுங்கை கட்டுக்குள் வைத்ததாக சொல்லப்பட்டாலும் மாயாவதியின் மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம் ... சென்ற முறை இவரது கட்சிக்கு அதிக வாக்குகள் அளித்த பிராமண , தாகூர் சமூகத்தினர் இம்முறை பி.ஜே.பி , காங்கிரஸ் பக்கம் சாய்ந்ததும் பி.எஸ்.பியின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் ...


பி.ஜே.பி யை பொறுத்த வரை கடந்த முறை பெற்ற 51 சீட்களை விட 2 சீட்கள் குறைவாக பெற்றது சறுக்கல் தான் என்றாலும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்ததை எண்ணி வேண்டுமானால் சந்தோசப்பட்டு கொள்ளலாம் ...

பஞ்சாபிலும் வரலாறு காணாத வகையில் ஆளுங்கட்சியான அகாலி தள் - பி.ஜே.பி கூட்டணி 68 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ... ஆட்சியை பிடிக்குமென எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 46 இடங்களையே வென்றிருக்கிறது ...

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல கோவாவிலும் 9 இடங்களையே கைப்பற்றி ஆட்சியை பி.ஜே.பியிடம் இழந்த காங்கிரசிற்கு ஒரே ஆறுதல் மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பதே , அதே போல உத்ராகந்தை பொறுத்த வரை ஆளும் பி.ஜே.பி , காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்தாலும் பி.ஜே.பி யே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லப்படுவதும் காங்கிரஸிற்கு நிச்சயம் கலக்கத்தை கொடுத்திருக்கும் ...


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல பல காங்கிரஸ் தலைவர்கள் உ.பி யில் அடைந்த தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் இல்லை , உள்ளூர் தலைவர்களே காரணம் என்பது போல பேச ஆரம்பித்துவிட்டார்கள் ...இரண்டு நாட்களுக்கு முன்பு கூட உ.பி யில் காங்கிரஸ் அடையப்போகும் வெற்றிக்கு ராகுல் தான் முக்கிய காரணம் என்று சொல்லி வந்தார்களே என கேட்டால் வடிவேலு பாணியில் அது போன வாரம் , இது இந்த வாரம் என்று சொல்வார்களோ என்னவோ , அவர்களுக்கு தான் மக்களின் மறதி மேல் எவ்வளவு நம்பிக்கை !

இந்த தேர்தல் முடிவுகள் அடுத்து 2014 இல் நடக்க போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் என்று சொல்லப்பட்டாலும் , காங்கிரஸின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையும் , நேரு குடும்பத்தில் இருந்து யாராவது போய் நின்றாலே மக்கள் ஓட்டளித்து விடுவார்கள் என்ற காங்கிரஸாரின் நினைப்புக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகவும் இதை நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம் ...

இனி வரப்போகும் தேர்தல்களுக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தியை காங்கிரஸ் அனுப்புகிறதோ இல்லையோ பி.ஜே.பி உட்பட மற்ற எதிர்கட்சிகள் அவர் வரவேண்டுமென்றே வேண்டிக்கொள்ளும் என நினைக்கிறேன் , ஏனெனில் அவர் ராசி அப்படி ...

ஒரு பக்கம் முடிவுகள் இப்படியிருந்தாலும் 2014 க்குள் பி.ஜே.பி தங்களுடைய பிரதம வேட்பாளர் யார் என்பதில் ஒரு தீர்மானத்தையும் , கட்சிக்குள் உள்ள பூசலை களைவதற்குரிய நடவடிக்கைகளையும் இப்பொழுதிலிருந்தே எடுக்காவிட்டால் மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு அவர்களே வழியமைத்து விடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை ...
 
( மேலே குறிப்பிட்டுள்ள தேர்தல் முடிவு எண்ணிக்கையில் சிற்சில மாற்றங்களை நாளை எதிர்பார்க்கலாம் )

தடுமாறும் காங்கிரஸ்- கலாமுக்கு மீண்டும் குடியரசு தலைவராக வாய்ப்பு?

 
 
நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பாக ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும் குழப்பத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
 
பிரதீபா பாட்டீல்
 
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் துணை குடியரசுத் தலைவர் அன்சாரி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்த கையுடன் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது
 
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 16-ந்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் தேர்தலில் போட்டியிருக்குமானால், 19-ந்தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும்.
 
19ம் தேதி பதிவாகும் வாக்குகள் 21ம்தேதி எண்ணப்படும். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
 
இந்த இரு தேர்தல்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி குரோஷியும் ஓய்வு பெறுகிறார்.
 
பிரதீபா பாட்டீல், கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 2012, ஜூலை 25-ந்தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
 
புதிய குடியரசுத் தலைவர்
 
தற்போதைய நிலைமைகளின்படி மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு யாரை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்துவது என்பதில் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்குக் காரணம் எந்தக் கூட்டணி கட்சியும் காங்கிரசை உறுதியாக ஆதரிக்காததுதான். பல்வேறு முக்கிய விவகாரங்களில் கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், காஙகிரஸுடன் முறுக்கிக் கொள்கிறது.
 
தி.மு.கவும் அவ்வப்போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொள்கிறது.
 
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கூட ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கூட்டுக் கட்சிகளில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
 
மீண்டும் கலாம்?
 
இந்த நிலையில் எந்த வம்புமே வேண்டாம்... பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏற்கக் கூடிய, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் ஆதரிக்கக் கூடியவரான அப்துல் கலாமையே மீண்டும் குடியரசுத் தலைவராக்கிவிட்டால் என்ன என்ற விவாதமும் காங்கிரஸ் கட்சியில் எழத் தொடங்கியிருக்கிறது.
 
இதற்காக தான் காங்கிரசாரின் நன்மதிப்பை பெற வேண்டி அண்மையில் இலங்கை சென்று சிங்களவனுக்கு சிங்களத்தில் பேசி துதி பாடினாரா! இப்போது தமிழனை வெறுக்கும் மத்திய அரசுக்கும், தமிழனை அளிக்கும் இலங்கைக்கும் நண்பனாக காவடி தூக்குபவராக மாறியதன் மூலம் ஜனாதிபதி பதவி தேடிவருகிறது என்பது நன்றாக தெரிகிறது.

ஒரு இனைத்தையே வரலாறு இதுவரை பார்த்திடாத வகையில் படுக்கொலை செய்த ஒரு நாட்டுக்கும் அதை செய்ய தூண்டிய இந்திய அரசுக்கும் துதி பாடி பதவி பெறும் அப்துல்கலாம் போன்றவர்கள் மக்களை ஏமாறி மக்கள் வயிற்றில் அடித்து , மக்களை அடிமையாக்கி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை விட மிகவும் மோசமானவர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இவர்களிடம் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளையடுத்து களைகட்டக் காத்திருக்கிறது குடியரசுத் தலைவர் தேர்தல் என்றால் மிகையில்லை.



மேற்கு வங்க முன்னாள் அமைச்சருக்கு ஷூவால் அடி

 
 
மேற்குவங்க மாநிலத்தில் நிபந்தனை ஜாமினில் கோர்டில் கையெழுத்திட வந்த அம்மாநில முன்னாள் அமைச்சரை, மர்ம ஆசாமி ஒருவர்‌ நேற்று 'ஷூ'வினால் அடித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த இடது சாரி ஆட்சியின் பொது அமைச்சராக இருந்தவர் சுஷ்ஹந்தா கோஸ், தற்போது மிட்னாபூர் மாவட்டம் கர்பீட்டா தொகுதியின் மார்க். கம்யூனிஸ்‌ட் கட்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
 
கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர் உச்சநீதிமன்ற உத்தரவினால் நிபந்தனை ஜாமினில் உள்ளார். நேற்று மிட்னாபூரில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அவிஜித்சோம் முன்பு ஆஜராகி கையெழுத்திட வந்தார். அப்போது கோர்ட் வளாகத்தில் இருந்த மக்கள் கூட்டத்தில் மர்ம ஆசாமி ஒருவர், திடீரென ‌கோஷமிட்டவாறு எம்.எல்.ஏ.வை நோக்கி ஓடிவந்து, பொதுமக்கள் முன்பு தனது காலி்ல் அணிந்திருந்த 'ஷூ' வை கழற்றி சரமாரியாக தாக்க தொடங்கினான்.இதில் எம்.எல்.ஏ சுஷ்ஹந்தா கோஸ் காயமடைந்தார்.
 
அவன் பெயர் சியாமா பதா குண்டு என்றும் மிட்னாபூர் மாவட்டம் கார்பெட்டா பகுதியை சேர்ந்தவன் என்றும் மிட்னாபூர் சதர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
பொதுமக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ. ஒருவர் ‌ஷூவால் அடிவாங்கியது பரபரப்பினை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேற்கு மிட்னாபூர் மாவாட்டத்தில் தன்னுடைய வீட்டினருகே எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக ஆகஸ்ட் மாதத்தில் கோஷ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 


Monday 5 March 2012

கர்நாடக சட்டசபையில் மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் பிட் படம் பார்த்தனர்

 
 
 
கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தனர். சட்டசபை நிகழ்ச்சியை படம் எடுத்துக் கொண்டு இருந்த தொலைக்காட்சி கேமிராவில் இது பதிவானது.
 
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமண் சபதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ண பாளேமர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீசைலப்பா பிதரூர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக இக்குழு பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்தியது. இதை தொடர்ந்து குற்றச்சாட்டில் சிக்கிய 3 முன்னாள் அமைச்சர்களிடம் நேரில் விசாரணை நடத்த பேரவை குழு தீர்மானித்தது.
 
இதற்காக வருகிற 8-ந்தேதி ஆஜராகுமாறு 3 முன்னாள் அமைச்சர்களுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆபாச படத்தை மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பார்த்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
 
இது குறித்து பேரவை குழுவில் இடம் பெற்று இருக்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நேரு செலேகர் கூறியதாவது:-
 
சட்டசபையில் 3 முன்னாள் அமைச்சர்கள் தவிர பாரதீய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படத்தை பார்த்துள்ளனர். இது எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எங்கள் கடமையை அரசியல் பாரபட்சமின்றி நிறைவேற்றுவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.