Followers

Thursday 29 December 2011

உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ஒப்பந்தம்

 
 
 
 
 
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. 403 தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் ராகுல்காந்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
 
அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்தல் பணிகளில் முடுக்கி விட்டுள்ளார். கட்சியின் வேட்பாளர்களுக்கு தேர்தல் பணியாற்ற, இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 12.5 லட்சம் பேரை ராகுல் தயார்படுத்தி வைத்துள்ளார். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 10 பேர் நியமிக்கப்படுவர். மேலும் பல ஆயிரம் இளைஞர் காங்கிரசார் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர்.
 
இதற்காக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்தையும், பணிகளையும் ஒருங்கிணைக்க, கூகுள் இணையதளத்துடன் ராகுல்காந்தி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர், தேர்தல் பொறுப்பாளர்கள், வாக்குச் சாவடி நிர்வாகிகள் ஆகியோருக்கு ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை இணைய தளம் மூலம் அவர் பிறப்பிப்பார்.
 
இந்த இணைய தளம் மூலம் 3 லட்சம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆக்கபூர்வமான கருத்துக்களை ராகுல்காந்தியுடனும் அவர்களுக்கு இடையேயும் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த நவீன யுக்தி தேர்தலில் காங்கிரசுக்கு கை கொடுக்கும் என்று மாநில நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.



No comments:

Post a Comment