Followers

Tuesday 3 January 2012

அன்னாவுக்கு வந்த இந்த நிலைமையும் ;காங்கிரசாரின் சந்தோசமும்

 
 
 
வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரக்கோரி பிரபல சமூக சேவகர் அன்னாஹசாரே 2 தடவை உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவரது கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
மத்திய அரசின் போக்கைக் கண்டித்து 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்யப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னா ஹசாரேக்கு திடீரென உடல் நலம் பாதித்தது. காய்ச்சல், சளித் தொல்லையால் அவதிப்பட்ட அவருக்கு மார்பில் தொற்று ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு அவர் மார்பில் வலிப்பதாக கூறியதால் புனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அன்னா ஹசாரே இன்னும் 5 நாட்களில் உடல்நலம் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அதன் பிறகும் 5 நாள் அவர் போதுமான அளவுக்கு ஓய்வு எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தனது உடல்நிலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அன்னாஹசாரே கூறியுள்ளார். உடல் நலம் முழுமையாக தேறிய பிறகு குழுவினருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
 
இதற்கிடையே அன்னா ஹசாரே குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அவர்கள் 5 மாநில தேர்தலில் அன்னாவை பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர். எனவே 5 மாநில தேர்தலில் ஹசாரே பிரசாரம் செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது.
 
நேற்று அன்னாஹசாரேயை பரிசோதித்த டாக்டர்கள், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு உண்ணாவிரதம் போராட்டம் எதிலும் ஈடுபடக்கூடாது என்று கூறினார்கள். எனவே இனி அன்னாஹசாரே உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடமாட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
 
இது பற்றி அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த மனீஷ் சிசோடியா கூறுகையில், அன்னா உடல் நலத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். இனி அவரை உண்ணாவிரதம் இல்லாது வேறு வகையான போராட்டங்களில் ஈடுபடுத்த உள்ளோம் என்றார்.

காங்கிரசுக்கு அனைத்து வழிகளிலும் பெரும் தலைவலியாக விளங்கிய அன்னா ஹசாரேவுக்கு வந்த இந்த நிலைமையும் அவரது குழுவினர் எடுத்துள்ள முடிவும் காங்கிரசாரை பெரும் சந்தோசத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.

இந்திராகாந்தி படுகொலை, ராஜீவ்காந்தி படுகொலைகள் மக்களுக்கு ஏற்படுத்திய வலிகளை தங்களுக்கு சாதகமாக வாக்குகளாக மாற்றி அரியணை ஏறியவர்களுக்கு அன்னாவின் இந்த நிலை ஒன்றும் பெரிதில்லை. மனிதாபிமானம் அற்ற மாக்களல்லவ்வா இவர்கள்....



No comments:

Post a Comment