Followers

Friday 17 February 2012

மும்பையில் காங்கிரசுக்கு எதிராக சீமான் தீவிர பிரச்சாரம்

 
 
 
மும்பை மாநகராட்சிக்கு நடைபெற உள்ள தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும் தாராவில், சயான் கொல்லிவாடா ஆகிய இடங்களில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.
 
 
தாராவில் உள்ள 178-வது வார்டில் பாரதிய ஜனதா, சிவசேனா, இந்திய குடியசுரக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் உமேஷ் ஜெயவந்த் மகாலேக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக்கொண்டார்.
 
 
இதே பகுதியில் மற்றொரு வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சயான் கொல்லிவாடா பகுதியில் உள்ள 168-வது வார்டில் பா.ஜ.க. கட்சி சார்பில் போட்டியிடும் தமிழரான கேப்டன் இரா.தமிழ்ச் செல்வனை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார்.
 
 
தாராவில் 90 அடிச்சாலையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசும்போது,
 
'' காங்கிரசுக்கு எதிராக தமிழர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.
 
இலங்கையில் ராஜபக்சே அரசு தமிழர்களை அழித்தொழிக்க நடத்திய இனப்படுகொலை போருக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுத்தும், ஆலோ சனை வழங்கியும், ராடார் அளித்தும், நிதிஉதவி, சிங்கள படையினருக்கு பயிற்சி என்று எல்லா வகையிலும் உதவியது.
 
தமிழ் இனத்தை வேரோடு அழிக்கத்துணைபோன காங்கிரஸ் கட்சியை தமிழ்ச் சொந்தங்கள் அழித்தொழிக்க வேண்டும்.
காங்கிரஸ் அரசை மத்தியில் இருந்து மட்டுமல்ல, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மராட்டியம், குஜராத் என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சென்று பிரச்சாரம் செய்து தோற்கடிக்க முயற்சிப்பேன்'' என்றார்.
 

 


No comments:

Post a Comment