Followers

Monday 20 February 2012

மு.க.அழகிரியை அவமதித்தாரா கே.என்.நேரு?-திமுகவில் அடுத்த பரபரப்பு!

 
 
 
மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டாலின் ஆதரவாளரான கே.என். நேரு மூலம் தற்போது மு.க.அழகிரி அவமானப்படுத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கே.என்.நேருவின் மன் கல்யாணம் நேற்று திருச்சியில் நடந்தது. கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது நான் 6வது முறையாக முதல்வராக வருகிறேனோ இல்லையோ, ஆனால் நேரு குடும்பத்தில் 6வது கல்யாணத்திற்கு வந்து விட்டேன். இதுதான் எனக்குப் பெருமையாக உள்ளது என்று பேசினார்.
 
இந்த திருமண விழாவில் வழக்கமாக கருணாநிதிக்கு அருகில் அமரும் மு.க.ஸ்டாலின் அவருக்குப் பக்கத்தில் உட்காராமல் சற்று தள்ளிப் போய் அமர்ந்தார்.மேலும், மு.க.அழகிரி திருமணத்திற்கு வரவே இல்லை. காரணம் அவரை அவமானப்படுத்தும் வகையில் திருமண அழைப்பிதழையும், பத்திரிகை விளம்பரத்தையும் கே.என்.நேரு தயாரித்ததே காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
 
பத்திரிகைகளில் நேரு சார்பில் தரப்பட்ட விளம்பரங்களில் தேய்பிறை படத்தைப் போட்டு அதில் அழகிரி படத்தைப் போட்டு விட்டார்களாம். இதனால் தேய்பிறை போல அழகிரி இனி தேயப் போகிறார் என்று நேரு மறைமுகமாக கூறியுள்ளதாக அழகிரி தரப்பு காட்டமாகியுள்ளது. இதனால்தான் அழகிரி திருமணத்திற்கு வரவில்லை என்கிறார்கள்.



No comments:

Post a Comment