Followers

Saturday 17 March 2012

சங்கரன்கோவில்: ம.தி.மு.க., பா.ஜனதா உள்பட 5 வேட்பாளர்களுக்கு ஓட்டு இல்லை

 
 
 
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகிறார்கள்.
 
அவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி, தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 8 வேட்பாளர்களுக்கு சங்கரன் கோவில் தொகுதியில் ஓட்டு உள்ளது.
 
ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார், பா.ஜ.க. வேட்பாளர் முருகன், சமாஜ்வாடி கட்சி சார்பில் சயேட்சையாக போட்டியிடும் நாகேஸ்வரராவ், காந்திய சிந்தனையாளர் மன்றம் சார்பில் போட்டியிடும் ஆறுமுகம், இந்திய ஜனநாயக குடியரசு கட்சி கணேசன் ஆகிய 5 வேட்பாளர்களுக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் ஓட்டு இல்லை.
 
ஆகையால் அவர்கள் 5 பேரைத்தவிர மற்ற 8 வேட்பாளர்களும் இன்று ஓட்டு போட்டனர்.



No comments:

Post a Comment