Followers

Wednesday 2 November 2011

அதிமுக, திமுகவுக்கு அடுத்த இடத்தில் தேமுதிக இருக்கிறது-விஜயகாந்த்

 
 
 
2009 லோக்சபா தேர்தலில் பெற்றதை விட கூடுதல் வாக்குகளை உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வாங்கியுள்ளது. அதிமுக, திமுகவுக்கு அடுத்த இடத்தில் தேமுதிக உள்ளது என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
சமீ்பத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக மாநில அளவில் 3வது இடத்தைப் பிடித்தது. இத்தேர்தலில் 8 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சித் தலைவர்கள், 120 நகராட்சிக் கவுன்சிலர்கள், 3 பேரூராட்சித் தலைவர்கள், 390 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 5 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 339 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என 867 இடங்களை வென்றது இக்கட்சி.
 
வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் விஜயகாந்த் தலைமை வகித்து பல்வேறு அறிவுரைகளை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்.
 
அப்போது விஜயகாந்த் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வைத்து தேமுதிக படுதோல்வி அடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், 2009 மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட அதிக அளவு வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். அதிமுக, திமுகவுக்கு அடுத்த இடத்தில் தேமுதிக உள்ளது. மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றார்.



No comments:

Post a Comment