Followers

Thursday 3 November 2011

கனிமொழி ஜாமீன் நிராகரிப்பு

 


2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. கனிமொழி தெரிந்தே இந்த பொருளாதார குற்றத்தைச் செய்துள்ளார். இது மிகவும் கடுமையானது. மேலும் பொது நிதியை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியுள்ளார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

எந்தவித நிர்பந்தத்தின் அடிப்படையிலும் இந்த தீர்ப்பு அளிக்கப்படவில்லை. உண்மை மற்றும் வழக்கின் தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்டு மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காதது சட்டத்தின் பார்வையில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியமானவைதான். ஆனால் அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளும் மதிப்பு குறைந்தவர்கள் அல்ல என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
( நன்றி: தினமணி )

சில கேள்விகள்:
1. ஏன் ராஜா இது வரை ஜாமீம் மனுவை தாக்கல் செய்யவில்லை ?
2. கனிமொழி ஜாமீன் மனுவிற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காது என்று எப்படி பத்திரிக்கைக்கு முன்பே தெரிந்தது ? ஏன் அது லீக் செய்யப்பட்டது ?

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன் திமுக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தெரிகிறது.சில காங்கிரஸ் அமைச்சர்கள் இன்றோ நாளையோ கனிமொழியை ஜெயில் சந்தித்து நலம் விசாரிப்பார்கள் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment