Followers

Wednesday 14 December 2011

மகாராஷ்ட்ரா நகராட்சி தேர்தல் முடிவுகள்:காங்கிரஸ் கட்சி கூட்டணி மகிழ்ச்சி

 
 
 
 
 
மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலின் முதற்கட்ட முடிவு காங்கிரஸ் கட்சி கூட்டணியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2834 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 1580 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று முடிவிலும் கூட்டணி காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்பாளர் ஆனந்த் காட்கில் கூறினார்.
 
சிவசேனா கட்சி 288 தொகுதிகளையும் பா.ஜ.க கட்சி 267 தொகுதிகளையும் கைப்பற்றியது. சிவசேனா கட்சி 5 நகராட்சி சபைகளில் பெரும்பான்மை பெற்று விளங்குகிறது. பா.ஜ.க கட்சி ஒரே ஒரு நகராட்சி சபையில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.



No comments:

Post a Comment