Followers

Thursday 15 December 2011

எந்த அரசியல் மாற்றத்தையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர் ரஜினி - கலைப்புலி தாணு

 
 
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழக அரசியலுக்கு எப்போது வந்தாலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர், என்றார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
 
நேற்று நடந்த ரஜினி பிறந்த நாள் விழாவில் கலைப்புலி தாணு பேசுகையில், "நான்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை சூட்டியதாக அடிக்கடி சொல்வார் ரஜினி. உண்மையில் மக்கள்தான் இந்தப் படத்தை அவருக்கு சூட்டினர். எந்த உயரத்துக்குப் போனாலும் தன்னை மறக்காதவர் ரஜினி.
 
மூப்பனாருக்காக ஒரு தனி கட்சியையே உருவாக்கி, முதல் தேர்தலிலேலே 39 எம்எல்ஏக்களையும் பெற்றுக் கொடுத்தவர் ரஜினி. அவரது ஒரே ஒரு வார்த்தை 1996-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை மாற்றியது.
 
இன்றைக்கும், எத்தகைய அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய வல்லமை ரஜினி ஒருவருக்கு மட்டுமே உண்டு," என்றார்.
 
'அண்ணன் ரஜினி விட்ட கேப்பில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்'
 
நடிகர் கருணாஸ் கூறுகையில், "ரஜினி எதற்காக தயங்குகிறார் என்று புரியவில்லை. 1996-ல் நடந்த அரசியல் மாற்றத்துக்கு முழு காரணம் ரஜினிதான்.
 
இன்றைக்கு இரண்டு படம் நடித்தவனெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கிறானுங்க... நேத்து கட்சி ஆரம்பிச்சவங்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவராம்.
 
இன்னும் சில நடிகர்கள் அரசியலில் குதிக்கப் போவதாக சொல்லிக்கிட்டிருக்காங்க.
 
ஓப்பனா சொல்றேன்... எங்கள் அண்ணன் ரஜினி விட்ட கேப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர்தான் விஜய்காந்த். ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் இவர்கள் எல்லாம் காணாமல் போயிருப்பார்கள்.
 
தலைவா, நீ எதுக்கும் தயங்காதே. இப்போது கட்சி ஆரம்பித்தாலும் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் நீங்கள்தான்," என்றார் கருணாஸ்.
 
'ரஜினி படத்தைத்தான் தினமும் கும்பிடுகிறேன்' - சின்னி ஜெயந்த்
 
நடிகர் சின்னி ஜெயந்த் பேசுகையில், என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அண்ணன் ரஜினிகாந்த்தான். அவர் படத்தைத்தான் நான் தினமும் என் பூஜையறையில் வைத்துக் கும்பிடுகிறேன், என்றார்.
 
நான்தான் தலைமை நிலைய பேச்சாளர் - வாசு விக்ரம்
 
நடிகர் வாசு விக்ரம் பேசுகையில், எங்க அண்ணன் ரஜினியிடம் எனக்கு அதிக உரிமையுண்டு. அந்த உரிமையில் சொல்கிறேன். தலைவா சீக்கிரம் கட்சியை அறிவியுங்கள். அந்தக் கட்சிக்கு நான்தான் தலைமை கழகப் பேச்சாளராக இருப்பேன். உங்களுக்காக எதைச் செய்யவும் என்னைப் போன்றவர்கள் தயார் என்றார்.
 
எஸ்பி முத்துராமன்
 
எஸ்பி முத்துராமன் பேசுகையில், "நானும் ரஜினியின் தீவிர ரசிகன்தான். ஒரு ரசிகனாக நான் சொல்கிறேன். அவர் எதற்காகவோ கொஞ்சம் யோசிக்கிறார். ஆனால் நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை தருவார். நண்பர்களே, அவர் கட்டிக் கொண்டு வா என்றால் நீங்கள் வெட்டிக் கொண்டு வர தயாராக இருக்க வேண்டும், " என்றார்.



No comments:

Post a Comment