Followers

Tuesday 13 December 2011

அன்னா என்ன பெரிய ஹரிச்சந்திரனா? காங்கிரஸ் தாக்கு

 
 
 
 
 
அன்னா ஹசாரே என்ன பொய்யே பேசாத ராஜா ஹரிச்சந்திரனா என்று காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரது குழுவினர் லோக்பால் மசோதா குறித்து விவாதித்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
காங்கிரஸ் எம்.பி. ராஷித் அல்வி கூறுகையில், அன்னாவும், எதிர்கட்சிகளும் சேர்நது பாலிடிக்ஸ் பண்ணுகிறார்கள். நேற்று ஜந்தர் மந்தரில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் காங்கிரஸுக்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணுகிறார்கள் என்றார்.
 
அன்னா ஹசாரே என்ன பொய்யே பேசாத ராஜா ஹரிச்சந்திரனா என்று காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார். அன்னா எதிர்கட்சித் தலைவராகிவிட்டார் என்று மத்திய அமைசச்ர் பெனி பிரசாத் வர்மா தெரிவித்தார்.
 
அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், ஜனநாயகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் விவாதிக்க நாடாளுமன்றம் தான் சிறந்த இடம். நாடாளுமன்றத்திற்கு வெளியே லோக்பால் பற்றி விவாதிப்பது பேசுபவர்களின் இரட்டை பேச்சு மற்றும் இரட்டை முகத்தைக் காட்டுகிறது என்றார்.
 
மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது, அன்னா மற்றும் அவரது குழுவினர் அரசியல் நோக்கத்தில் தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியைத் தாக்கி பேசியுள்ளனர். அன்னா காங்கிரஸ் கட்சியையே குறிவைக்கிறார். பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் நடக்கும் ஊழல்களைப் பற்றியெல்லாம் அவர் வாய்திறக்க மாட்டார் என்று குற்றம்சாட்டினார்.
 
நேற்று நடந்த அன்னா உண்ணாவிரதத்தில் பாஜகவின் அருண் ஜேட்லி, ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த சரத் யாதவ், இடது சாரியைச் சேர்ந்த ஏபி பர்தன், பிருந்தா கரத், டி. ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.



No comments:

Post a Comment