Followers

Tuesday 13 December 2011

அஞ்சலியை அலைய விடும் செல்போன் கடை!

 
 
விளம்பரத்தில் நடித்துக் கொடுத்ததற்கான பணத்தை கொடுக்காமல் நடிகை அஞ்சலியை பிரபல செல்போன் கடையொன்று இழுத்தடித்து, அலைய விட்டுக் கொண்டிருக்கிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த அஞ்சலி, தனது சம்பளத்தை பெற்றுத்தரும்படி கோர்ட் உதவியை நாடியிருக்கிறார். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படம் லாபகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் சந்தோஷத்தில் இருக்கும் அஞ்சலியை பழைய பாக்கி ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. பாக்கி வைத்தவர்கள் மீது சட்டையை பிடித்து உலுக்காத குறையாக ஆத்திரப்பட்டிருக்கிறார்.
 
அஞ்சலி நடிக்க வந்த ஆரம்பத்தில், ஒரு மொபைல் ஷாப் விளம்பரத்தில் நடித்துக் கொடுத்தார். இதற்காக ஐந்து லட்சம் சம்பளம் பேசிய கம்பெனி, அதில் 46 ஆயிரம் ரூபாயை மட்டும்தான் கொடுத்திருந்ததாம். அதன்பின் தர வேண்டிய மீதி தொகையை தராமல் இத்தனை காலம் இழுத்ததடித்ததோடு அல்லாமல், விளம்பரத்தையும் கடந்த ஐந்து வருடங்களாக பயன்படுததி வருகிறது. பொறுத்து பொறுத்து பார்த்த அஞ்சலி, அவர்களிடமிருந்து 20 லட்ச ரூபாயை பெற்றுத் தரும்படி கோர்ட் உதவியை நாடியிருக்கிறார்.



No comments:

Post a Comment