Followers

Sunday 6 November 2011

உன்னைக் கொலை செய்வோம் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனுக்கு மிரட்டல்!

 
 
 
குறிப்பிடுகிற ஆளிடம் ரூ. 20 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் உன்னைக் கொலை செய்வோம் என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அதிமுக அவைத் தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவரது வீடு பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ளது. இந்த வீட்டுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
 
அக்கடிதத்தில், நான் குறிப்பிடுகின்ற ஆளிடம் ரூ. 20 லட்சத்தை கொடுத்து விட வேண்டும். அப்படி கொடுக்கா விட்டால் உன்னை கொலை செய்வோம். கொலை எங்களுக்கு புதிதல்ல. இதற்கு முன்பு நிறைய கொலைகளை செய்திருக்கிறோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
 
இதையடுத்து மதுசூதனன் தண்டையார்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையில் குதித்துள்ளனர். கடிதம் பொன்னேரியிலிருந்து அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு விசாரணை பார்வை திரும்பியுள்ளது.
 
ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவைத் தலைவருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment