Followers

Friday 11 November 2011

ஓவராப் பாராட்டுறீங்களே..அத்வானி அழுகை!

 
 
 
பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அவரை பலரும் வெகுவாகப் பாராட்டிப் பேசியதால் ஆனந்தக் கண்ணீர் விட்டார். தொடர்ந்து அவர் கண்ணீர் சிந்தியபடி இருந்ததால் கூட்டத்தினரும் நெகிழ்ந்தனர்.
 
அத்வானி பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அரசியலுக்கும், பாஜகவுக்கும், அத்வானி ஆற்றிய சேவையை புகழ்ந்து பேசினர். இதைக்கேட்டதும் சிலமுறை அத்வானிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவரால் ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.
 
ஒரு கட்டத்தில் அவர் மிகவும் நெகிழ்ந்து போய் விட்டார்.இதனால் மேடையை விட்டு வெளியேறிய அவர் சிறிது நேரம் கழித்தே திரும்பி வந்தார். நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி தனது பிறந்த நாளுக்காக யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இன்று டெல்லி வந்திருந்தார்.



No comments:

Post a Comment