Followers

Thursday 4 October 2012

தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மீண்டும் ஒருமனதாக தேர்வு



தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மீண்டும் ஒருமனதாக தேர்வு தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மீண்டும் ஒருமனதாக தேர்வு

சென்னை,அக்.5-
 தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது 2012-2016-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  டி.வி.சீதாராமராவ் சீனியர் துணை தலைவராகவும், கே.எம்.ராமலிங்கம், ராஜா ஆர்.ராஜகோபால் த�¯ �ண்டைமான், சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, அந்தோணி கே.ஜார்ஜ் ஆகியோர் துணை தலைவராகவும், ஆர்.ரவிகிருஷ்ணன் செயலாளராகவும், எம்.பத்மநாபன் இணை செயலாளராகவும், என்.நாராயணகுப்தா பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  செயற்குழு உறுப்பினர்களாக எல்.ஜெயச்சந்திரன், டி.கே.வரலட்சுமி, எம்.சுரேஷ்குமார், என்.பக்தவச்சலம், எஸ்.வேல்சங்கர், பி.அண்ணாமலை ஆகியோரும் போட்டியின்றி தேர்வு ச ெய்யப்பட்டனர்.  

Friday 14 September 2012

கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி


கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இடிந்தகரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் நேற்று கடலில் à ��ின்று போராட்டம் நடத்தியபோது, கடற்படை விமானம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவது போல தாழ்வாகப் பறந்ததால் பீதியடைந்த 5 போராட்டக்காரர்கள் நிலை தடுமாறி கடலில் விழுந்தனர். அதில் ஒருவர் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க 15 நாட்களாக கழுத்தளவு நீரில் நின்று விவசாயிகள் நடத்திய போராட்ட முறை இப்பொழுது கூடங்குளத்தில் எதிரொலித்து வருகிறது.

நேற்று முதல் இடிந்தகரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிராம மக்கள் கடலில் à ��ின்றபடி போராடி வருகின்றனர். இன்று 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடலோரக் காவல் படையின் சிறிய ரக விமானம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது படு தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் தொனியில் இருந்தது. மத்தியப் பà ��ரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது கூட இப்படி நடந்து கொள்ளவில்லை மத்திய பாதுகாப்புப் படை. ஆனால் நேற்று நடந்ததைப் பார்த்த பொதுமக்கள், இது சிங்களப் படையினர், ஈழத் தமிழர்கள் மீது ஏவிய அடக்கà ��முறையை நினைவூட்டுவதாக உள்ளதாக குமுறல் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அச்சுறுத்தலால் ஒரு அப்பாவி போராட்டக்காரர் உயிரிழந்துள்ள செய்தி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் பலரும் இப்போராத்தில் கலந்து கொண்ட போது சிலர் தூண்டில் பாலத்தில் நின்றபடி போராட்டத்தை பார்த்தனர். அப்போது பல முறை கடலோரக் காவல்படை விமானம் மிகத் தாழ்வாக பறந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகைகளை பயமுறுத்தியது. விமானம் மிகமிக தாழ்வாக பறக்கும் போ�® �ு பாலத்தில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் விமானம் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் தான் பாலத்தில் இருந்து சகாயராஜ் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்துள்ளனர். அதில் சகாயராஜ் தலையில் படுகாயமடைந்தது. இதையடுத்து 5 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராஜ் உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட தமிழர்கள் மிகவும் கொதித்து போயுள்ளனர். காரணம், இதுவரை 550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் கொல்லபட்ட போது பாதுகாப்புக்கு வராத இந் திய கடலோர காவல் படை , இப்போது தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராட்டும் மக்களை குறிவைத்து வானில் பல நூறுமுறை பறந்து செல்கிறது. எவ்வளவு முறையிட்டும் இந்திய அரசு மக்களை காக்க இது போல விமானம் மூலம் கண்காணிக்கவில்லை . இன்று மட்டும் ஏன் இந்த விமானம் பலமுறை சுற்றிச் சுற்றி வட்டமிட்டது என�¯ �ற கேள்வியை எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.


/

Thursday 13 September 2012

மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!

மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்! மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!

மதுரையில் நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆ தரவாளர்களிடையே பெரும் அடிதடி நடந்து போராட்ட இடமே போர்க்களமாகிப் போனது.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் போலவே திமுகவிலும் இப்போது கோஷ்டிப் பூசல் கலாச்சாரம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் லேசு பாசாக இருந்த இந்த கோஷ்டிப் பூசல் இப்போது தள்ளுமுள்ளு, கை கலப்பு, அடிதடி, வார்த்தைகளை விடுதல், வாரி விடுதல் என அவதாரங்களை எடுக்க ஆரம்�® �ித்துள்ளது.

மதுரையைப் பொறுத்தவரை அண்ணன் அழகிரி கோஷ்டி மட்டும்தான் ஒரே அதிகார மையமாக இருந்து வந்தது. ஆனால் சட்டசபைத் தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் தம்பி ஸ்டாலினின் கையும் அங்கு ஓங்கத் தொடங்கி விட்டது. அழகிரி ஆதரவாளர்கள் பலரே கூட இப்போது ஸ்டாலின் பக்கம்தான் நிற்கின்றà ��ர். குறிப்பாக மதுரை நகர் மாவட்டச் செயலாளர் தளபதி இப்போது தீவிர ஸ்டாலின் ஆதரவாளராகியுள்ளார்.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் தளபதி, அழகிரி ஆதரவà ��ளர்களான முன்னாள் எம்.எல்.ஏ கவுஸ் பாட்ஷா, முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கமும் வந்திருந்தார்.

அனைவரும் மேடையில் இருந்தனர். அப்போது அழகிரி ஆதரவாளரும், சமீபத்தில் மாவட்ட அவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவருமான இசக்கிமுத்துவை மேடைக்கு வருமாறு அழைத்தனர் சிலர�¯ . இதைப் பார்த்து ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது, தடித்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் கைகள் கலக்க அந்த இடமே போர்க்களமானது. சரமாரியாக இரு தரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.< /div>
இதைப் பார்த்து போராட்டத்திற்கு வந்த தொண்டர்கள், ஸ்தம்பித்துப் போய் நின்றனர். பின்னர் போலீஸார் விரைந்து வந்து மோதலை விலக்கி விட்டனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஒப்புக்கு சில கோஷங்களைப் போட்டு மாநகராட்சியைக் கண்டித்து விட்டு மூன்றே நிமிடத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டு தளபதி உள்ளிட்டோர் அங்கிருந்து போய் விட்டனர்.

பட்டப் பகலில் பப்ளிக்கில் நடந்த இந்த கோஷ்டி மோதலால் மதுரை வட்டார திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர்.


/

இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா

இலங்கையின் தமிழினப் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கும் அதே நேரத்தில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் சிங்களருக்கு இடையூறு ஏற்படக் க ூடாது என்பதில் உறுதியாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது.

துணிச்சல் மிகக் தீர்மானங்கள்:

இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெ றும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன்.

தமிழக அரசின் எதிர்ப்பு:

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதால், அதற்கு நம் தமிழகத்தின் எதிர்ப்பை, உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை தடை செய்தேன். இவை காரணமாக, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக வாழ் தமிழர்களும் எனது அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர். எனினும் இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மீகப் பயணம் போன்றவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வரு கை புரியும் சிங்களர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் எனது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

மெளனியாக மத்திய அரசு- கருணாநிதி மீது தாக்கு:

ஆனால், தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார்.

இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கை அரசிற்கும், ராணுவத்திற�¯ �கும் ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய இடங்களில் மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், அதற்கு ஒரு வலுவான எதிர்ப்பினை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

இருப்பினும், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர், இலங்கைத் தமிழர்களுக்காக à ��ன கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார். இவ்வாறு தமிழர் மானத்தை காப்பாற்றுபவர்தான் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் எனது அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறார்.

சர்.பிட்டி தியாகரயரின் தன்மானக் கதை:

தன்மானம் பெரிது என்று வாடிநயன் தான் தமிழன். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை இந்தத் தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சர். பிட்டி தியாகராயர் என்ற ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர். பதவிக்காக எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இல்லாதவர். இவர் சென்னை மாந கராட்சியின் மேயராக சில காலம் இருந்தார். அந்த சமயத்தில், வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்திருந்தார். இளவரசரை வரவேற்பதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போதைய கவர்னரான லார்டு வெல்லிங்டன் சர் தியாகராயரைப் பார்த்து, சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் இளவரசரை முதலில் நீங்கள் தான் வரவேற்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு சர். தியாகராயரும் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் கவர்னரிடமிருந்து வேறு ஒரு தகவல் வந்தது.

இளவரசரை சந்திக்கும் போது நீங்கள் கோட், சூட் உடையில் தான் இளவரசரை வரவேற்க வேண்டும் என்பது தான் அந்தத் தகவல்.

உடனே, சர்.பிட்டி தியாகராயர் அரசாங்கத்திற்கு ஒரு பதில் எழுதினார் . அதில் என்னுடைய வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை இந்த ஆடைகளோடு என்னை இளவரசர் பார்க்க விரும்பினால் நான் அவரை உளமார வரவேற்கிறேன். இந்த ஆடையுடன் நான் அவரை பார்க்க முடியாது என்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து அமைதி பெறுவேன். இளவரசரை வரவேற்பதற்காக நான் என்னுடைய வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை என்று உறுதிபட தெரிவித்து இருந்தார்.

அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

அந்த ஆங்கிலேய அரசு பணிந்து வந்து, அவருடைய வழக்கமான உடையிலேயே இளவரசரை வரவேற்க அனுமதி அளித்தது. சர். தியாகராயர் நடந்து கொண்ட விதம் தான் தமிழனின் தன்மானம். அதனால் தான் பிரிட்ட ிஷ் அரசாங்கம் அவருடைய கோரிக்கையை ஏற்றது.

இத்தகைய தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனை சீர்குலைக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக ்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார் ஜெயலலிதா.


/

Wednesday 12 September 2012

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., ready for a.d.m.k

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., : தொகுதி வாரியாக கூட்டம் அறிவிப்பு லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., : தொகுதி வாரியாக கூட்டம் அறிவிப்பு
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., : தொகுதி வாரியாக கூட்டம் அறிவிப்பு



லோக்சபா தேர்தலுக்கு, தொண்டர்களை தயார்படுத்தும் வகையில், லோக்சபா தொகுதி வாரியாக, கூட்டங்களை நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வரும், 19ம் தேதி முதல், நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவினர், தொகுதி வாரியாக கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனர். லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றி, மத்திய அரசில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு, தேர்தல் பணிகளை, அ.தி.மு.க., முடுக்கி விட்டுள்ளது. கடந்த மாதம், 27ம் தேதி நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அ.தி.மு.க., வசம் உள்ள, சட்டசபை தொகுதிகளில், செய்ய வேண்டிய பணிகள் எவை என்ற பட்டியலையும், எதிர்க்கட்சிகள் வசம் உள்ள தொகுதிகளின் தேவைகள் குறித்த பட்டியலையும் உடனடியாகத் தயார் செய்யும், இதை கண்காணிக்க, நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவையும் ஜெயலலிதா அமைத்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன், தொகுதி வாரியாக தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்யவேண்டுமென, கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, லோக்சபா தொகுதி வாரியாக, கூட்டங்களை நடத்த, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சியின், 52 மாவட்டங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மக்கள் பணிகளை ஆற்றிடவும், அமைச்சர்கள் ஓ.பி.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், வரும், 19ம் தேதி முதல், நவ., 9ம் தேதி வரை, லோக்சபா தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்த உள்ளனர். இதில், மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், லோக்சபா தொகுதிகளைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., மன்றம், மகளிர் அணி, இளைஞர் பாசறை உள்ளிட்ட கட்சியின் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். அமைச்சர்கள் அளிக்கும் ஆலோசனைகளின் படி, கட்சிப் பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.

வரும், 19ம் தேதி காலை, மதுரையிலும், மாலை, விருதுநகரிலும் கூட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு இரு லோக்சபா தொகுதிகள் என்ற அடிப்படையில், புதுச்சேரி உள்ளிட்ட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அமைச்சர்கள் குழு பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள், நவம்பர், 9ம் தேதி வரை நடக்கிறது.

தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம்



தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம் தமிழ்நாட்டில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயம்
தமிழ்நாட்டில் மின் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவà ��கிறது. தமிழ்நாடு முழுவதும் சாதாரண நேரங்களில் 10,000 மெகாவாட் மின்சாரமும், காலை, மாலை, இரவு நேரங்களில் 12,000 மெகா வாட் மின்சாரமும் தேவைப்படுகிறது. ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. 30சதவீத மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பற்றாக் குறையை சமாளிக்க சென்னை நகரில் 1 மணி நேரமும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் கூடுதல் நேரமும் மின்வெ�® �்டு அமல் படுத்தப்படுகிறது. 

தமிழ் நாட்டில் இப்போது மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்தும், ஆரல்வாய் மொழி, பாலகாட், தென்காசி, தேனி ஆகிய இடங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றின் வேகம் அ திகரிக்கும் சமயங்களில் காற்றாலை மின்சாரம் முழு அளவில் கிடைக்கும் போது தட்டுப்பாடு ஓரளவுக்கு சமாளிக்கப்படுகிறது. ஆனால் காற்றின் வேகம் நிலையற்ற தன்மையில் இருப்பதால் சில சமயம் முழு மின்சாரமும், சில சமயம் மின் உற்பத்தியே இல்லாமலும் போய் விடுகிறது. இதலால் திடீர் என்று மின்வெட்டு அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. 

காற்றாலை மூலம் அதிக பட்சம் 2,500 மெகா வாட்டில் இருந்து 4,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. இந்த மாத இறுதியில் காற்று சீசன் முடிவடைகிறது. அடுத்து வடகிழக்கு பருவ மழை காலத்தில்தான் மீண்டும் காற்று சீசன் தொடங்கும். எனவே அடுத்த சில வாரங்களில் மின்தட்டுப்பாடு நிலைமை மோசம் அடையும் நிலை உருவாகிறது. 

தமிழ்நாட்டுக்கு மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவும் குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் உள்ள ஆந்திர மாநிலம் சிம்காத்ரி, ராமகுண்டம், ஒடிசா மாநிலம் தல்சேர், நெய்வேலி ஆகிய மின்நிலையங்களில் இருந்தும், கல்பாக்கம் அணுமின் நிலையம், கர்நாடக மாநில�® �் கைகா அணுமின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 2,481 மெகாவாட் மின்சாரத்துக்கு பதில் 1,500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. மேலும் வடசென்னை வள்ளூர் அனல் மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் காற்றாலை மின்சாரம் தான் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. அதுவும் இந்த மாத இறுதியில் குறைந்து விடும் நிலை உள்ளதால் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை இனிவரும் காலங்களில் மின்சார பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை நகரில் 1 மணி நேர மின்வெட்டு அமலில் இருந்தாலும் சில இடங்களில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு பகுதியாக நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அடுத்து வரும் காலங்களில் மின் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து மின் வாரியம் ஆலோசித்து வருகிறது.



/

Tuesday 11 September 2012

அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் ...!!!



அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் ...!!! அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் ...!!!


அரசியல் கட்சிகளுக்கு டாடா, பிர்லா, வேதாந்தா, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜிண்டால், எஸ்ஸார் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடைகளை அள்ளி வழங்கி வருகின்றன. இதில் பிர்லா நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது.

இது குறித்து ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் (Association for Democratic Reforms and the National Election Watch) திரட்டியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ள விவரம்:

பிர்லா நிறுவனத்தின் பொதுத் தேர்தல் அறக்கட்டளை 2003-04 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மட்டும் ரூ. 36.46 கோடியை காங்கிரஸ் கட்சிக்கும், ரூ. 26 கோடியை பாஜகவும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

டாடா, பிர்லா, வேதாந்தா, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜிண்டால், எஸ்ஸார் ஆகிய நிறுவனங்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு மட்டுமல்லாமல் ஒடிஸ்ஸா உள்ளிட்ட கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களைச் சேர்ந்த மாநில கட்சிகளுக்கும் ஏராளமான நன்கொடைகளைத் தந்துள்ளன.

இந்த நிறுவனங்களில் பல நிலக்கரி சுரங்க லைசென்ஸ்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது அறக்கட்டளை சார்பில் 2008-09ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 11 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 6 கோடியையும் நன்கொடையாக தந்துள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் பொது மற்றும் அரசியல் விழிப்புணர்ச்சி அறக்கட்டளை சார்பில் 2003-05ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு 9.5 கோடி தந்துள்ளது.

டாடாவின் தேர்தல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 9.96 கோடியும், பாஜகவுக்கு ரூ. 6.82 கோடியும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு ரூ. 30 லட்சமும், சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 1.58 கோடியையும் தந்துள்ளது.

ஹார்மொனி நிறுவனத்தின் தேர்தல் அறக்கட்டளை சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 2 கோடியும், பாஜகவுக்கு ரூ. 1.5 கோடியும், சத்யா நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 2 கோடியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1 கோடியையும் தந்துள்ளது.

டோரண்ட் பவர் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 14.15 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 13 கோடியையும், ஏ�® �ியாநெட் ஹொல்டிங்ஸ் நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 10 கோடியும், காங்கிரசுக்கு ரூ. 2.5 கோடியும்,

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ. 6 கோடியும், அதே வேதாந்தாவின் மெட்ராஸ் அலுமினியம் நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 3.5 கோடியும் தந்துள்ளது.

அதே போல சதர்ன் என்ஜினியரிங் வொர்க்ஸ், வீடியோகான் ஆகியவையும் காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனி்ஸ்ட், சரத்பவாருக்கு ஏராளமாக நன்கொடை தந்துள்ளன.

அதிமுகவுக்கு...

ஐடிசி நிறுவனம் சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 78 லட்சமும், அதிமுகவுக்கு ரூ. 55 லட்சமும், லாலுவ�® �ன் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ரூ. 33 லட்சமும் தந்துள்ளது.

மொத்தத்தில் 2004-05 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மிக அதிகமான நன்கொடை பெற்ற கட்சிகள் காங்கிரஸ் (ரூ. 2,008 கோடி), பாஜக (ரூ. 994 கோடி), மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (ரூ. 484 கோடி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (ரூ. 417 கோடி) ஆகியவை தான்




/

Sunday 9 September 2012

அண்ணா வளைவு விவகாரத்தில் புகார்: கருணாநிதியை சாடுகிறார் முதல்வர் ஜெ.,


அண்ணா வளைவு விவகாரத்தில் புகார்: கருணாநிதியை சாடுகிறார் முதல்வர் ஜெ.,




அண்ணா வளைவு விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அபாண்டமான குற்றச்சாட்டுக்களை கருணாநிதி சுமத்துகிறார். அண்ணா பவள விழா வளைவை அகற்ற நான் உத்தரவிடவில்லை, என்று, முதல்வர் ஜெயலலிதா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் கருணாநிதி, அண்ணா வளைவை இடிக்க முதலில் அனுமதியளித்து விட்டு, இடிப்பு பணிகள் பாதியள&#299 7;ு முடிந்த நிலையில், இடிக்கக்கூடாது என, நான் திடீரென உத்தரவிட்டுள்ளதாக கூறி இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போத&#300 9; தான், 117 கோடி ரூபாயில், நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணாநகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்ட அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, 2011 பொதுத் &# 2980;ேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றேன்.

உத்தரவிடவில்லை:


ஆட்சி மாற்றத்திற்குப் பின், முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக் கமாக மேற்கொள்ளப்படுவது போல், இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இந்த மேம்பா&#299 4;ப் பணி மற்றும் வளைவு அகற்றப்படுவது குறித்து என்னை யாரும் கலந்தாலோசிக்கவும் இல்லை; நான் அகற்ற உத்தரவிடவும் இல்லை.அரசின் அனைத்து முடிவுகளும், முதல்வர் ஒப்புதல் ப ெற்று வெளியிடப்படுவதில்லை என்பது, ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா? அரசு நிர்வாகம் எப்படி செயல்படும் என்று தெரியாமலேயே முதல்வராக காலத்தை தள&#30 21;ளிவிட்டு, இதுபோன்ற கேள்வியை தனக்கு தானே எழுப்பி பதிலளிக்கிறாரா? என்பதற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும்.

அள்ளி வீசும்:


கடந்த ஆட்சியில், மேம்பாலம் அமைக்க, முடிவெடுக்கப்பட்ட போதே, அண்ணா நினைவு வளைவு வழியாகத் தான் பாலம் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பது கருணாநிதிக்கு தெர& #3007;யாதது எப்படி. ஒரு வேளை, சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த வளைவை, அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த மேம்பாலப் பணிக்கு அவர் வழங்கிய உத்தரவு, என்னால் த&#297 5;ைபட்டு விட்டதே, என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போல் உள்ளது.எது எப்படியோ, முந்தைய தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவு, என் கவனத்திற்கு முன்பே கொண்டு வரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் உத்தரவிட்டிருப்பேன்.அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து, பத்திரி&#2965 ;ைகளில் வந்த செய்திகளின் மூலம் நான் அறிந்து, பணியை உடனடியாக நிறுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், இந்த வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியினை நிறைவேற்&# 2993; ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கலாம் என்றும் உத்தரவிட்டேன்.

அதன் அடிப்படையில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு நடத்தி, ஈ.வெ.ரா., சாலையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மேம்பாலத்தை, சிறிது கிழக்குப் புறமாக மாற்றியமைத்து, மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தேன். இதன் மூலம் வளைவு அகற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்&#2 965;ிருக்கக் கூடாது என்ற தன் தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா என்பதை கருணாநிதி தான் தெளிவு படுத்த வேண்டு ம்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Thursday 6 September 2012

ஆசைதான் எனக்கு

ஆசைதான் எனக்கு













 மார்கழி குளிர் இதமாய்உன் நெஞ்சத்தில்,
மஞ்சமிட ஆசைதான் எனக்கு.
உன் முரட்டுகரங்களுக்குள்,  
இடைவெளியே இல்லாமல்,

இணைந்து கிடக்கஆசை தான்எனக்கு.
நீ உறங்குகிறாய்என்று எண்ணி 
முகமெங்கும் முத்தமிட்டு,
உன் விழிப்பில்வெட்கப்பட 
 ஆசைதான் எனக்கு.
நீள்கிற ஆசைகளை 
 பட்டியலிட தோன்றினாலும்,
உன் வார்த்தைஅம்புகளுக்கு 
பயந்து  எனக்குள் மருகி போகிறேன்.
காதலோடு நேசிக்கும் பெண்மையை
சம்பிரதாயகூட்டிற்குள் முடக்கிவிடுவாதால்
வாழ்வும் கசந்து தான் போகிறது.

Monday 27 August 2012

எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் மன்மோகன் சிங்

எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் மன்மோகன் சிங்

ஐந்தாவது நாளாக இன்றும் நிலக்கரி சுரங்க விவகாரத்தில் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் பாரதீய ஜனதா முடக்கியது. அந்த அமளிகளுக்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் இரு அவ� �களிலும் விளக்கம் அளித்தார். அப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்து அறிக்கை சமர்பித்த மத்திய கணக்கு தணிக்கை குழுவினரைப்பற்றி சந்தேகப்படும் கேள்விகளை கேட்டார்.
 
பின்னர் பாராளுமன்றத்தை விட்� ��ு வெளியே வந்த பிரதமர், உருது பழமொழியை உதாரணம் காட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
எனது மவுனம் ஆயிரம் பதில்கள் கூறுவதைவிட சிறந்தது. எனவே உங்களின் கேள்விகளை புறந்தள்ளுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உண்ம� ��யில் உங்களின் கேள்விகளை உள்ளூர மதிக்கிறேன் என்பது தான் இதன் அர்த்தம்.  


எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், அவற்றை கண்டு அஞ்சுகிற இயக்கமல்ல தி.மு.க: மு.க. ...

எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், அவற்றை கண்டு அஞ்சுகிற இயக்கமல்ல தி.மு.க: மு.க. ...

நெல்லை,ஆக.27- நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பாளை ஜவஹர் திடலில் நேற்று  இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதற்காக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் ஏ தோ பெயரளவுக்கு போடப்பட்ட தீர்மானங்கள் அல்ல. அதனை செயல்படுத்த ஐ.நா. சபைக்கே நேரடியாக தீர்மான நகலை கொடுக்கவுள்ளோம்.

இலங்கை தமிழருக்காக நாங்கள் திடீரென இப்போதுதான் குரல் கொடுப்பது போல சிலர் கூறி வருகின்றனர். 1956-ம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிலேயே இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து இலங்கை தமி ழர்களுக்காக தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது.

இலங்கை தமிழர்களுக்காகவே இருமுறை ஆட்சியை பறிகொடுத்துள்ளோம். தலைவர் கலைஞரும் , பொதுச் செயலாளர் அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதுபோல டெசோ அமைப்பும் புதிதாக தொடங்கப்பட்டது அல்ல. 1985-ஆம்  ஆண்டு டெசோ அமைப்பு தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் பல இடங்களில் அப்போதே டெசோ கூட்டங்களை நடத்தியுள்ளோம். ம� ��ுரையில் 1986-ல் டெசோ மாநாட்டை நடத்தியுள்ளோம். அதில் வாஜ்பாய், என்.டி.ராமராவ் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லாவிட்டாலும் சரி, உலகெங்கும் உள்ள தமிழர்களை பற்றி கவலைப்படுகிற இயக்கம் தான் தி.மு.க. இலங்கை பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறவர்கள், இந்த பிரச்சினையை தி.மு.க. கையில் எடுத்� �வுடன், அதனை எள்ளி நகையாட முயன்று வருகின்றனர்.

இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் ஆதரவற்றுள்ளனர். மிச்சம் இருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் மீண்டும் டெசோ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மூடிமறைக்கும் விதமாக தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.

எத்தனை வழக்குகள் போட்டாலும், எந்த � ��ட்டத்தை கொண்டு வந்தாலும், அவற்றை கண்டு அஞ்சுகிற இயக்கமல்ல தி.மு.க. வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்போம். நான் நீதிமன்றத்துக்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் தலைவர் கலைஞர் நீதிமன்றம் வருவார். இலங்கை தமிழர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அரணாக தி.மு.க. இருக்கும் என்றார்.

கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ராதாரவி நக்கல்!

கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ராதாரவி நக்கல்!

கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாத குஷ்பு இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார் என்று நக்கலடித்துள்ளார் அதிமுக நடிகர் ராத ாரவி.

நாகர்கோவிலில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:
தேர்தல் சமயத்தில் அதிம� �கவை அழித்து விடுவோம் என கூறிய பலர் இன்று காணாமல் போய் விட்டனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஏனென்றால் இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி.

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வசதி படைத்தவர்களே வாங்க யோசிக்க கூடிய லேப்-டாப் கம்ப்யூட்டரை பள்ளி, கல்லூரிகளில் படிக� �கும் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் வழங்கி அவர்களையும் சமநிலைக்கு உயர்த்தி உள்ளார். இது தான் நாட்டிற்கு தேவையான வளர்ச்சி.

இலங்கையில் 3 லட்சம் தமிழ் பெண்கள் விதவையாக காரணம் திமுக தலைவர் கருணாநிதி. அவர் டெசோ மாநாடு நடத்தி மக்களை குழப்புகிறார்.

விஜயகாந்துக்கு 41 சீட் கொடுத்து அவரை எதிர்கட்சி தலைவர் ஆக்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவருக்கு அதை காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை. அவரெல்லாம் புரட்சிதலைவியைப் பற்றி பேசக் கூடாது.

கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாத குஷ்பு இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார்.

நான் இப்போது கூட வருடத்திற்கு 5 படங்களிலாவது நடிக்கிறேன். ஆனால் ஒரு நல்ல நடிகர் வடிவேலு. அவரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்க வில்லை. மாறாக விஜயகாந்தை பழி வாங்குவதாக நினைத்து பேசினார். ஒரே நாள் ராத்திரியில் இருந்து அவருக்கு சினிமா வாய்ப்பு இல்ல� ��மல் போய் விட்டது.

சிலர் புரட்சித்தலைவிக்கு இந்தியாவின் பிரதமராக ஆசை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல, இந்தியா தான் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகிறது. இந்தியாவில் இருக் கும் அனைத்து மொழிகளையும் இலக்கணத்தோடு பேசும் திறன் படைத்தவர் புரட்சித் தலைவி. அடுத்த தேர்தலிலும் அதிமுகதான் அமோக வெற்றி பெறும் என்றார் ராதாரவி.


Thursday 29 March 2012

'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான' அதிமுகவினர்!

 
 
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று சசிகலா நீக்கப்பட்டபோது சித்தாந்தமாக பேசி சிலாகித்துப் போன அதிமுகவினர் இப்போது எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டதே என்று திகிலடித்துப் போய் நிற்கின்றனராம்.
 
காரணம், சசிகலாவின் மறு வருகை.. இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், பின்னர் சேர்ந்து கொள்வார்கள், இது என்ன புதுசா என்றுதான் 4 மாதத்திற்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு அதிமுகவை விட்டும் போயஸ் கார்டன் வீட்டை விட்டும் ஜெயலலிதா தூக்கியபோது அனைவருமே நினைத்தார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவின் செயல்பாட்டு வேகத்தைப் பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும், பரவாயில்லையே உண்மையிலேயே சசிகலாவை துரத்தி விட்டு விட்டாரே என்றுதான் நினைத்தனர்.
 
விரட்டிய வேகத்தில், சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக வழக்குகள் பாயத் தொடங்கின. இதுவரை நடராஜன், திவாகரன், ராவணன் என மூன்று பேர் சிறைக் கம்பிகளுக்குள் சிறைப்பட்டுள்ளனர். அடுத்து மகாதேவன், தொடர்ந்து சசிகலா என பெயர் அடிபட்ட நேரத்தில்தான். அக்கா.. என்னை மன்னிச்சுடுக்கா என்று அறிக்கை வந்துள்ளது சசிகலாவிடம்...
 
சசிகலாவின் அறிக்கை தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதிமுக சார்ந்த, அதிகார மட்ட, காவல்துறை அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், இனி மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்கும், நாமெல்லாம் மறுபடியும் கைகளை மாற்றிக் கட்ட வேண்டும் என்ற பதட்டமே.
 
சசிகலா நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவான கட்சிக்காரர்களை மேலிடத்திற்குப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர் தற்போது அதிர்ச்சி அடைந்து போய் நிற்கின்றனராம். தாங்கள் சசிகலாவால் பழிவாங்கப்படலாம் என்ற பயம்தானாம் அது.
 
அதேபோல சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து வரும் போலீஸாரும் கூட பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகள் மட்டத்திலும், இனி என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது, சசிகலா தலையீடு மறுபடியும் இருக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனராம்.
 
மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம், சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரும் ஆட்டம் போட ஆரம்பிப்பார்களே, அதை முதல்வர் ஜெயலலிதா எப்படித் தடுக்கப் போகிறார் என்ற கேள்விகள் அதிமுகவினர் மத்தியில் இல்லாமல் அரசு அதிகாரிகள் மத்தியிலும் நிலவுகிறது.
 
சசிகலாவின் மறு வருகையால், உண்மையான அதிமுகவினர்தான் பெரும் கலக்கத்தில் மூழ்கியுள்ளனர். கட்சி உருப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டு தற்போது மறுபடியும் கலங்கலாக்கி விட்டனரே என்ற வேதனையிலும், விரக்தியிலும் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. மேலும் சசிகலா நீக்கப்பட்டபோது அதற்கு கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என பல தரப்பிலும் பெரும் வரவேற்பு காணப்பட்டது. காரணம், சசிகலா குடும்பத்தினர் தமிழகத்தை சூறையாடி போட்ட ஆட்டம்தான். கருணாநிதி குடும்பத்தினரை மிஞ்சி விட்டனரே என்றுதான் அத்தனை பேரும் சசிகலா குடும்பத்தி்னர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.
 
சசிகலா நீக்கத்தை வைத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பல முக்கியப் புள்ளிகளும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப யோசித்து வருவதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அத்தனையும் தவிடுபொடியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா சண்டை என்பது பொம்மை விளையாட்டு போல என்றாகி விட்டது. எனவே அதிமுகவின் தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இந்த உண்மையான அதிமுகவினர் உள்ளனராம்.
 
சசிகலாவின் மறு வருகை அதிமுகவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.



சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளிநடப்பு

 
 
தேமுதிக தலைவர் விஜய்காந்தை மறைமுகமாக அதிமுக எம்எல்ஏ கு.ப.கிருஷ்ணன் தாக்கியப் பேசியதையடுத்து அதற்கு பதிலளித்த தேமுதிகவினருக்கு அனுமதி தரப்படாததால் அவர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
சட்டசபையில் இன்று அதிமுக எம்எல்ஏ கு.ப.கிருஷ்ணன் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனியாக நின்று சந்திக்கத் தயாரா? திராணி இருந்தால் தேர்தலில் சந்திப்போம் என்று சவால் விட்டதும், அதன்பிறகு தேர்தலில் அவருக்கு டெபாசிட் பறிபோனதும் எல்லோருக்கும் தெரியும். தற்போது கட்சியை தொடர்ந்து நடத்தலாமா அல்லது கலைக்கலாமா என்று ஆலோசனை நடப்பதாக தெரிகிறது என்றார்.
 
இதற்கு தேமுதிக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்தனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?. நீங்கள் ஏன் எகப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் ஏன் நடந்து கொள்கிறீர்கள் என்றார்.
 
அப்போது பேசிய தேமுதிக மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப.கிருஷ்ணன் பேசியதை ஒப்பிட்டு பார்த்தால் எங்களைத்தான் சொல்வதாக உள்ளது அவரது பேச்சை முழுமையாக வாங்கி ஒப்பிட்டு பாருங்கள். இதேபோல் பேசினால் சட்டமன்ற நடைமுறை வேறு திசை நோக்கி சென்று விடும் என்றார்.
 
அப்போது சபாநாயகர் ஜெயக்குமார் குறுக்கிட்டு, யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதன் பிறகும் நீங்கள் விளக்கம் சொன்னால் எப்படி? என்றார்.
 
இதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அவையில் இல்லாத எங்கள் கட்சித் தலைவரை தாக்கி பேசுவது எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துவதுபோல் உள்ளது. எனவே அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு தனது கட்சி எம்எல்ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் கேட்டது தேமுதிகவைத்தான். ஆகவே அதற்குப் பிறகு கட்சியை நடத்துவதா வேண்டாமா என்று அவர் யோசனை செய்துகொண்டிருக்கிறார் என்கிற தகவல் வந்திருக்கிறது என்று சொல்லுவது தேமுதிகவைத்தான் குறிக்கும். ஆகவே இரண்டையும் சேர்ந்து பார்த்து இவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு பேரவைத் தலைவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே வெளிநடப்பு செய்தோம் என்றார்.
 
அதிமுக.. தேமுதிக..அதிமுக.. கு.ப.கி.யின் பயணம்:
 
முன்பு அதிமுக அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அதிலிருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.கவில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



Monday 26 March 2012

கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன்புமணி

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தம்மை கேப்டன் என்று அழைத்துக் கொள்கிறார்... அவர் எந்த விளையாட்டுக்கு கேப்டனாக இருந்தார்? அல்லது ராணுவத்துக்கு கேப்டனாக இருந்தாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் அன்புமணி பேசியதாவது:
 
தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி பா.ம.க. மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சிகள், ஆட்சி செய்து முடித்து விட்ட பிறகு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆனால், பா.ம.க. -வுக்கு, அடுத்த தேர்தல் முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் .
 
விஷன் 2023/
 
தமிழகத்தை, 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் செய்த சாதனைகள் என்ன? சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா, 2023 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, 15 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமாம். தமிழகம் தற்போது, 1 லட்சத்து 19 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 7.25 கோடி மக்களில் ஒருவரின் மீது, 17 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இந்த நிலையில், தொலைநோக்கு திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்ட முடியும் ? தற்போது தமிழக அரசுக்கு வருமானம் என்பது டாஸ்மாக் மட்டுமே, இதை வைத்து கொண்டு இந்த நிதியை திரட்ட முடியுமா.
 
கேப்டனா?
 
தமிழகத்தில், மது, சினிமா போன்ற தேவையற்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாமக உறுதியாக உள்ளது. தி.மு.க. - அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற அனைத்து கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சினிமா பார்ப்பது தவறு அல்ல. ஆனால், அதை கலாசாரமாகக் கருதி கடைபிடிக்கக் கூடாது. தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, சினிமாக்காரர்கள் தான்அதிகம் உள்ளனர்.
 
கேப்டன் என்கின்றனர், அவர் என்ன புட்பால் கேப்டனா, அல்லது வாலிபால் கேப்டனா, அல்லது ராணுவக் கேப்டனா, நான் கூட இந்த விளையாட்டுக்கு எல்லாம் கேப்டனாக செயல்பட்டுள்ளேன்.
 
பாமக, ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்கை அமுதல் படுத்துவோம் என்பதுதான் என்றார் அவர்.



Thursday 22 March 2012

இதெல்லாம் ஒரு தோல்வியா?... விஜயகாந்த் பேச்சு!

 
 
 
இடைத் தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு சடங்காக மாறி விட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 முறை இடைத் தேர்தல்களில் அதிமுக தோல்வியுற்றது. எனவே சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறி கொடுத்தது. இதுகுறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பண பலத்தைப் பிரயோகித்து இந்தத் தேர்தலை சந்தித்தது ஆளும் கட்சியான அதிமுக.
 
இந்தத் தேர்தலே உழைப்பிற்கும், பண பலத்திற்கும் இடையிலான போட்டியாகவே இருந்தது. அதில் பண பலம் வென்றுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 இடைத் தேர்தல்கள் நடந்தன. அதில் ஒன்றில் கூட அதிமுக வென்றதில்லை.
 
பொதுத் தேர்தலில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், இடைத் தேர்தல்களில் பிரதிபலிப்பதில்லை. மேலும் தமிழகத்தி்ல இடைத் தேர்தல் என்பது ஒரு சடங்காக மாறி விட்டது. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
 
தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக உழைப்போம், தொடர்ந்து போராடுவோம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.



சங்கரன்கோவில் சவாலை முறியடித்தார் ஜெ ...!

 

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி ஜெயிப்பது என்பது நடைமுறை தான் என்றாலும் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரால் விடப்பட்ட சவாலால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சம்பிரதாயமாக இல்லாமல் சண்டைக்களமாக மாறியது ...

கடந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சியமைத்ததிலிருந்தே கூட்டணி கட்சியான தே.மு.தி.க வுடன் புகைச்சல் ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே ... உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வெளியிட்டதிலிருந்தே புகைச்சல் நேரடி சண்டையாக மாறியது ...

உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றாலும் தே.மு.தி.க படு தோல்வியை சந்தித்ததிலிருந்து அ.தி.மு.க விற்கு மாற்று தி.மு.க தான் என்பது மேலும் ஊர்ஜிதமாகியது ... இந்த தோல்வியிலிருந்து தே.மு.தி.க பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை... அ.தி.மு.க வுடனான கூட்டணியால் தான் தன்னால் எதிர்க்கட்சி தலைவராக முடிந்தது என்பதை முற்றிலும் மறந்த விஜயகாந்த் தன்னால் தான் ஜெயலலிதாவால் அரியணை ஏற முடிந்தது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார் ...



விலைவாசி உயர்வு தொடர்பான சட்டசபை விவாதத்தின் போது போது இது வெளிப்படையாக தெரிந்தது ... உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாள் பால் , பஸ் டிக்கெட் விலைகளை ஏற்றாததற்கு தோல்வி பயம் தானே காரணம் என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி முதல்வருக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாகவே இருந்தது ...

நிச்சயம் விலையேற்றத்தையும் மீறி மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்ற முதல்வரின் நம்பிக்கை வீண்போகவில்லை , அதே சமயம் எல்லா அமைச்சர்களும் அந்த தொகுதியில் வட்டமடித்ததிலிருந்தே பண விநியோகம் நிறைய நடந்திருக்கும் என்று மற்ற கட்சிகள் முன் வைக்கும் வாதத்தையும் மறுப்பதற்கில்லை ...

விலையேற்றத்தையும் தாண்டி தினமும் ஆறு மணி நேரத்திற்கு மேல் ஏற்படும் மின் தடங்கலே தொகுதி மக்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது என்பதை உணர்ந்த ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பேசிய போது சாக்கு போக்கு எதுவும் சொல்லி பொறுப்பை தட்டி கழிக்காமல் வரும் ஜூன் மாதத்திற்குள் மின் பற்றாக்குறை தீர்த்து வைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது ...

தேர்தல் முடிந்த அடுத்த நாளே கூடங்குளம் அணுமின் நிலைய வேலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே அவர் சொன்னதை செய்வதில் முனைப்புடன் இருக்கிறார் என்பது தெள்ள தெளிவாகிறது ... அ.தி.மு.க 68000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பதும் , தே.மு.தி.க நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது ...

Monday 19 March 2012

அறிவிப்போடு நின்றுபோன கருணாநிதியின் உண்ணாவிரதம் part -2

 
 
 
அன்று வெறும் 3 மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து ஈழப் போரையே 'நிறுத்தினார்' திமுக தலைவர் கருணாநிதி. ஆனால் இன்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, அதைத் தொடங்காமலேயே ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 'வெல்ல வழி வகுத்து விட்டார்' கருணாநிதி.
 
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்பதை சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது போல பிரதமர் மன்மோகன் சிங் பேசிய நிலையில், உடனடியாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதாகவும், உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திற்கு அவசியமில்லை என்றும், பிரதமரின் அறிவிப்பு ஈழப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிரடியாக பேசியுள்ளார் கருணாநிதி.
 
முன்னதாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கருணாநிதி தலைமையில் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டது. மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறும் என்று முன்னதாக திமுக தலைமை இன்று காலை அறிவித்திருந்தது.
 
அண்ணா அறிவாலயம் வளாகத்தில் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பார். மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகர்களில் கட்சியினர் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும் அது கூறியிருந்தது.
 
இந்த நிலையில்தான் லோக்சபாவில், பிரதமர் இதுதொடர்பாக விளக்கம் அளித்துப் பேசினார். இதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார். அவரது பேச்சு திருப்தி தருவதாகவும், வெற்றி என்றும் கூறி தனது போராட்டத்தையும், உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தையும் சேர்த்து கைவிட்டு விட்டது திமுக.
 
கருணாநிதியின் முந்தைய உண்ணாவிரதம்
 
ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த கடைசி நாட்களில், இப்படித்தான் கருணாநிதி ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து மெரீனா பீச்சில் போய் படுத்தார். வெறும் 3 மணி நேரமே அந்த உண்ணாவிரதம் நீடித்தது.
 
காலையில் வாக்கிங் போனவர் நேராக பீச்சுக்குப் போய் கட்டிலில் படுத்து விட்டார். கூடவே மனைவி தயாளு அம்மையார், துணைவி ராசாத்தி அம்மையார், மகள் கனிமொழி, திமுக தலைவர்கள் என தடபுடலாக தொடங்கியது போராட்டம்.
 
ஆனால் 3 மணி நேரத்திலேயே போராட்டத்தை முடித்து விட்டார்கள். மத்திய அரசு ராஜபக்சேவிடம் நேரடியாகப் பேசி விட்டது. போர் நிறுத்தப்பட்டு விட்டது. குண்டு வீச்சு நின்று விட்டது. தமிழர்கள் அத்தனை பேரும் பத்திரமாக உள்ளனர் என்று கூறி பேட்டியளித்து விட்டு கிளம்பிப் போனார் கருணாநிதி.
 
ஆனால் அதற்குப் பிறகுதான் போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த பல ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொத்து குண்டுகளை வீசி கொடூரமாகக் கொன்று குவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
 
இந்த நிலையில் இப்போதும் ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து அதை தொடங்கக் கூட வாய்ப்பில்லாமல் முடித்தும் விட்டது திமுக.


 


Saturday 17 March 2012

சங்கரன்கோவில்: ம.தி.மு.க., பா.ஜனதா உள்பட 5 வேட்பாளர்களுக்கு ஓட்டு இல்லை

 
 
 
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகிறார்கள்.
 
அவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி, தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 8 வேட்பாளர்களுக்கு சங்கரன் கோவில் தொகுதியில் ஓட்டு உள்ளது.
 
ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார், பா.ஜ.க. வேட்பாளர் முருகன், சமாஜ்வாடி கட்சி சார்பில் சயேட்சையாக போட்டியிடும் நாகேஸ்வரராவ், காந்திய சிந்தனையாளர் மன்றம் சார்பில் போட்டியிடும் ஆறுமுகம், இந்திய ஜனநாயக குடியரசு கட்சி கணேசன் ஆகிய 5 வேட்பாளர்களுக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் ஓட்டு இல்லை.
 
ஆகையால் அவர்கள் 5 பேரைத்தவிர மற்ற 8 வேட்பாளர்களும் இன்று ஓட்டு போட்டனர்.