Followers

Friday 28 October 2011

ஈரோடு மேயருக்கு செங்கோலால் வந்த சிக்கல்!

 
 
 
ஈரோடு மாவட்ட மேயருக்கு செங்கோலால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
 
நகராட்சியாக இருந்த ஈரோடு கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக்கப்பட்டது. எனவே நகரமன்ற தலைவராக இருந்த குமார் முருகேஷ் மேயராக்கப்பட்டார். இதையடுத்து பதவியேற்பு விழாவில் அவருக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி கையால் செங்கோல் வழங்குவதாக இருந்தது.
 
இந்நிலையில் முருகேஷ் தனது சொந்த பணம் ரூ. 1.35 லட்சம் செலவு செய்து 3,400 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கோல் செய்து வாங்கினார். அதை பதவியேற்பு விழாவில் கருணாநிதி கையால் வாங்கிக் கொண்டார். கடந்த வாரம் நடந்த மேயர் தேர்தலில் போட்டியிட்ட முருகேஷ் எப்படியும் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் செங்கோலை மாநகராட்சி அலுவலகத்திலேயே வைத்திருந்தார்.
 
ஆனால் எதிர்பாராவிதமாக மல்லிகா பரமசிவம் மேயராகிவிட்டார். இதையடுத்து முருகேஷ் தனது செங்கோலை திருப்பித் தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் கேட்டுள்ளார்.
 
இது குறித்து முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
எனது சொந்த பணத்தில் வாங்கிய செங்கோலுக்கான தொகையை மாநகராட்சி நிதியில் இருந்து எடுத்துக் கொடுக்குமாறு அப்போதைய ஆணையாளர் செல்வராஜிடம் கேட்டேன். சரி என்று சொன்னவர் கடைசி வரை பணத்தை தரவேயில்லை. தற்போதுள்ள ஆணையாளர் செங்கோலை திருப்பிக் கேட்டால் பதில் பேசமாட்டேன் என்கிறார் என்றார்.
 
போகிற போக்கைப் பார்த்தால் மல்லிகாவும் ஒரு செங்கோல் வாங்க வேண்டியது வரும் போலும்.



No comments:

Post a Comment