Followers

Tuesday 18 October 2011

இது அழகல்ல

 


சொத்துக் குவிப்பு வழக்கு தொட்ர்பாக ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவது உறுதியாகிவிட்டது. நேற்று கடைசி முறையாக பாதுகாப்பு குறித்து மனு ஒன்றை சமர்பித்தார் ஆனால் அதை கோர்ட் நிராகரித்துவிட்டது. அதுவும் வந்திருக்க மாட்டார் ஆனால் உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்திரவால் நேரில் வர சம்மதித்தார்.

பொதுவாழ்வுக்கு வந்த பின் உயிரைப்பற்றி கவலைப்படுபவர்கள் பொதுவாழ்வுக்கே தகுதி அற்றவர்கள். ஜெயலலிதா செய்வது சட்டப்படிதான் என்றாலும், மனசாட்சி படி இது தப்பு. ஒரு முதலமைச்சருக்கு இது அழகல்ல.

திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்ட தமிழக மக்கள் இனி 'கோவணத்துண்டு' என்ற சின்னதுக்கு ஓட்டு போடலாம்.
எதற்கும் ஓ.பன்னீர்செல்வம் ரெடியாக இருப்பது நல்லது !

No comments:

Post a Comment