Followers

Saturday 22 October 2011

இவ்வளவு மோசமான தோல்வியை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை! - ஈவிகேஎஸ்

 
 
 
உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி பெறும் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
 
தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில்:
 
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு இவ்வளவு மோசமான தோல்வி கிடைக்கும் என்றுநான் நினைக்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் உள்ள 3 பெரிய கட்சிகளில் காங்கிரசும் ஒன்று என்ற நிலை ஆறுதலை தருகிறது.
 
காங்கிரஸ் தனித்து போட்டி என்றதும் மக்களிடம் வரவேற்பு இருந்தது. ஆனால் அது ஓட்டாக மாறவில்லை என்பதுதான் உண்மை. ஆளுங்கட்சிக்கு என்று சில வசதிகள் உள்ளன. அரசு நிர்வாகமும், காவல் துறையும் அவர்கள் கையில் இருக்கிறது.
 
மக்களுக்கு அதிக அளவு பணமும் தரப்பட்டன. கடந்த 5 மாத கால அ.தி.மு.க. ஆட்சியில் மின்தட்டுப்பாட்டை தவிர மக்கள் வெறுக்கும் சம்பவங்கள் ஏதும் நடக்க வில்லை. இது அ.தி.மு.க.வுக்கு பெரிய அளவில் வெற்றியை தந்திருக்கிறது. தி.மு.க. தரப்பிலும் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது.
 
இந்த தேர்தலில் 650 பேர் உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றபடி காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் குழப்பம் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களால் பணம் செலவழிக்க முடியவில்லை. கிராமப்புறங்களில் ஓரளவு காங்கிரஸ் நன்றாக இருக்கிறது. காங்கிரசை பலப்படுத்த வேண்டியது அவசியம். காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்," என்றார்.



No comments:

Post a Comment