Followers

Friday 7 October 2011

விநியோகிக்கப்படாத நிலையில் 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள்!

 

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சுமார் 40 ஆயிரம் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாத நிலையில் தபால் நிலையங்களில் எஞ்சியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவிக்கிறது. வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி தபால் மாஅதிபர் ஆர்.டி.பி.காமினி தெரிவிக்கிறார். இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்லுக்காக 15 இலட்சத்து 86 ஆயிரத்து 867 உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் தேர்தல்கள் செயலகத்தினால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment